Followers

Tuesday, February 01, 2011

திருச்சியும் தஞ்சையும் ஒளரங்கசீப்பும்!

திருச்சிக்காரன் என்ற பதிவர் ஒளரங்கசீப் ஹிந்துக்களின் மீது ஜிஸ்யா என்ற வரியை விதித்து கொடுமைப் படுத்தியதாக பதிவிட்டிருக்கிறார். அவரது எண்ணம் தவறு என்பதை வரலாற்று நூல்களின் ஆதாரத்தோடு தஞ்சைக்காரனான நான் இட்ட பழைய பதிவை மீள் பதிவாக்குகிறேன்.

//பாட்டனார் அக்பரின் நல்லிணக்கக் கோட்பாடுகளை அவுரங்கசீப் காற்றில் பறக்க விட்டதாகவே வரலாறு சொல்லுகிறது.

அவுரங்கசீப் பிற மதத்தை சேர்ந்தவர்களின் மீது ஜிசியா எனப் படும் தனி வரியை விதித்து இருக்கிறார். ஜிசியா எனப் படும் வரி இஸ்லாமிய மார்க்கத்தை சேராதவர்கள் மீது விதிக்கப் படும் வரி என்பதாக இருந்திருக்கிறது.

இஸ்லாத்தை சேராதவர்கள்திம்மிஎன்று சொல்லப் பட்டனர். ஒவ்வொருதிம்மியும் மாதா மாதம் ஜிசியா வரி கட்ட வேண்டும். இதிலே அதிகம் பாதிக்கப் பட்டது ஏழைகள்தான்.

ஒரு திம்மி இருநூறு ரூபாய் வரையிலான நிலத்தை வைத்து இருந்தால் அவன் மாதா மாதம் ஒரு ரூபாய் ஜிசியா வரி கட்டினால் போதுமாம். இருநூறு ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வைத்திருப்பவனுக்கு மாத வருவாயாக ஐந்து ரூபாய்க்கு மேல் வருமானம் வர வாய்ப்பில்லை.

அந்தக் காலத்தில் பத்துப் பதினைந்து பிள்ளைகளைப் பெற்ற ஏழை திம்மி தனக்கு மாத வருமானமாக வரும் ஐந்து ரூபாயில் தன்னுடைய குடும்பத்தைக் கவனிப்பதே மிகவும் கஷ்டம்.

இந்தக் கஷ்டத்தில் அவன் மாதம் எப்படி ஒரு ரூபாயை வரியாக குடுக்க முடியும். அதெல்லாம் உன் பிரச்சினை , நீ திம்மியாக இருந்தால் வரி கட்ட வேண்டும் அப்படி வரி கட்டாமல் இருக்க வேண்டும் என்றால் திம்மியாக இருக்காதே, மாறி விடு என்பதுதான் கோட்பாடு.

ஒரு ஏழை திம்மியாக இருந்தால் அவன் கஞ்சி குடிக்க வைத்திருக்கும் காசும் சுரண்டப்படும். அதுவும் அந்த திம்மியின் குடும்பத்தில் வயதுக்கு வந்தவர்கள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஜிசியா வரி கட்ட வேண்டும். அதே ஏழை திம்மியாக இல்லாவிட்டால், மாறி விட்டால் அவன் வரி கட்ட வேண்டியதில்லை.//

திருச்சிக்காரரின் பதிவுக்கு தஞ்சைக்காரனான நான் முன்பு அளித்த பதிவை இனி பார்ப்போம்.

ஜிஸ்யா வரியும் மன்னர் ஒளரங்கஜேப்பும்!

நம்முடைய வரலாற்றுப் பாட நூல்களில் எத்தனையோ பொய்களை அரங்கேற்றி இன்று வரை மாணவர்களுக்கு போதித்து வருகிறார்கள். இயற்கையாகவே ஒரு சில இந்துக்கள் எந்த காரணமும் இன்றி முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உமிழ காரணம் இளம் வயதில் படித்த இத்தகைய வரலாற்று பாட நூல்களே! அவற்றுள் ஒரு பொய் ஒளரங்கஜேப் முஸ்லிம அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியைப் புகுத்தி கொடுமை படுத்தினார் என்பது. இதை நாமும் நம்பி விடுகிறோம்.

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும் பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாக ஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான் ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.

அடுத்து ஒளரங்கஜேப் மத வெறி உடையவரஇந்துக்களை கொடுமைப் படுத்தினார் என்ற கருத்தும் வரலாறுகளில் காணப்படும். ஒளரங்கஜேப் எப்படிப் பட்டவர் என்று தெரிந்து கொண்டால் இதற்கும் விடை கிடைக்கும்.

ஒளரங்கஜேப்பின்் உயில்மௌலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி ஒளரங்கஜேப்பின்் வாழ்க்கை பற்றிய நூலின் 8வது அத்தியாயத்தில் அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து:

1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை. என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்யவேண்டும் என்பது என் விருப்பம். வேறுயாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

2. என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது. அதில் கவனமாகச் சேமித்து வைத்த 04 ரூபாயும் 02 அனாக்களும் இருக்கின்றன. எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர்ஆன் பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன், தொப்பிகள் தைத்தேன். அந்த தொப்பிகளை விற்றுத்தான் நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது. அந்த பணத்தில்தான் (என் உடல்மூடும்) ·பன் துணி வாங்கப்பட வேண்டும். இந்த பாவியின் உடலை மூட வேறு எந்தப் பணமும் செலவிடப்படக் கூடாது. இது எனது இறுதி விருப்பம்.
(என் கையால் எழுதப்பட்ட) குர்ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ருபாய்கள் பெற்றேன். அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது. இந்த பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

3. என்னுடைய சாமான்கள் அனைத்தும் -- துணிமணிகள், மைக்கூடுகள், எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸமிடம் கொடுத்துவிட வேண்டும். என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

4. ஒரு அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்பட வேண்டும். என்னைப் புதைத்த பிறகு, என்னுடைய முகத்தைத் திறந்து வைக்க வேண்டும். என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம். திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன். அவனுடைய உச்ச நீதிமன்றத்துக்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

5. எனது ·பன் துணி தடித்த கதர்த்துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலின் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம். எனது சவஊர்வலம் செல்லும் வழியில் மலர்களைத் தூவவேண்டாம். என் உடல்மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது.

6. எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது. வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக்கொள்ளலாம்.

7. பல மாதங்களுக்கு என்னால் என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. நான் இறந்தபிறகு, என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளங்களும் கொடுக்கப்பட வேண்டும், ஏனெனில் கஜானா காலியாக இருக்கிறது. நிஅமத் அலீ எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன். என் உடலை அவன்தான் சுத்தப்படுத்துவான். என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயிலை.

8. என் நினைவாக எந்த கட்டிடமும் எழுப்பக் கூடாது. எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்தக் கல்லும் வைக்கக் கூடாது. கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது. என்னைப் போன்ற ஒரு பாவிக்கு நிழல் தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியில்லை.

9. எனது மகன் ஆஸம் டெல்லியிலிருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான். பிஜாபூர், கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பக்ஷிடம் விடப்பட வேண்டும்.

10. அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன்தான் இந்த உலகிலேயே துரதிருஷ்டம் மிக்கவன். எந்த சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது. எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக் கூடாது.

கி.பி. 1658-லிருந்து 1707-வரை இந்தியாவை ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆண்ட ஆறாவது முகலாய மகா சக்கரவர்த்தியின் மரண விருப்பங்கள் இவை! அவருடைய விருப்பப்படியே சாதாரண செங்கற்களால் கட்டப்பட்ட அவரது கல்லறையை இன்றும் ஔரங்காபாத்-தில் காணலாம்.
மேற்கண்ட உயிலின் வாசகங்கள், நவம்பர் மாதம் 7-ம் தேதி, 1976-ம் ஆண்டு தேதியிடப்பட்டபதஹ்' என்ற வார இதழில், எஸ். அஜ்மீர் சிங் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்த்துப் போடப்பட்டது.

தன் முகத்தை மண்ணுக்குள் புதைக்க வேண்டாம் என்றும் திறந்த முகத்தோடு இறைவனை சந்திப்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப் படுவதாகவும் ஒளரங்கஜேப் கூறியிருப்பது அவருடைய சொந்தக் கருத்தே! மனிதர்களை புதைக்கும் போது உடல் முழுவதும மண்ணுக்குள் சென்று விட வேண்டும் என்று தான் முகமது நபியின் வாக்கு உள்ளது. ஒளரங்கஜேப்புக்கு தவறான தகவலை இது விஷயத்தில் யாரும் தந்திருக்கலாம். இறைவனே மிக அறிந்தவன்.

தமிழகம் வரை தமது ஆட்சியை ஒளரங்கஜேப்்விரிவு படுத்தியிருந்தார். இவ்வளவு எளிமையாகவும் குர்ஆனின் போதனைப் படியும் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் இந்து மக்களை கொடுமைப் படுத்தியிருப்பாரா? அப்படியே கொடுமை படுத்தியிருந்தாலும் அவை வரலாறுகளில் பதியப் பட்டிருக்குமே! மேலோட்டமாக சொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே! மேலும் மொகலாயர்களின் ஆட்சிக்கு முன் இந்தியாவை ஆண்டவர்களின் ஆட்சியை விட முஸ்லிம்களின் ஆட்சி நிம்மதியாக இருந்ததால்தான் 800 வருடம் இந்தியாவை அவர்களால்ஆள முடிந்தது.


ஒளரங்கஜேப் ஒரு விளக்கம்!

ஒளரங்க என்ற சொல்லிற்கு 'அரசு சிம்மாசனம்' என்று பொருள் வரும். 'ஜேப்' என்ற சொல்லுக்கு அழகு என்றும் பொருள். இவ்விரு பார்சிய சொல்லுக்கும் 'அழகிய அரசு சிம்மாசனம்' எனறு பொருள் வரும். ஆனால் 'ஒளரங்கஜேப்' என்று அழைப்பதற்கு பதிலாக 'ஒளரங்கசீப்' என்றே பலரும் கூறி வருகின்றனர் நமது நாட்டு பாடநூல்களிலும் ஒளரங்கசீப் என்றே இவர் பெயரை குறிப்பிடுகிறார்கள். ஒளரங்கஜேப்பின் பெயரையே மாற்றி அமைத்தவர்கள் அவரது வரலாற்றில் எந்த அளவு பொய்களை கலந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு திரு செ. திவான் எழுதிய Aurangazeb In The Light Of History எனும் நூலை பார்வையிடலாம்.

-தந்தையை சிறையில் தள்ளியவர்
-சகோதரர்களை கொன்று விட்டு சக்ரவர்த்தியானவர்
-இந்துக்களை வேலை நீக்கம் செய்தவர்
-சிவாஜியை அழிக்க முயன்றவர்
-இராஜபுத்திரர்களின் விரோதி
-சீக்கியர்களின் விரோதி
-மத வெறியர்

போன்ற பல குற்றச்சாட்டுகளும் கடைந்தெடுத்த பொய் என்பதை வரலாற்று நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டள்ளது.
பாடப் புத்தகங்களில் வரலாறுகளை எழுதும் வரலாற்றாசிரியர்கள் இனி மேலாவது வரலாறுகளில் உண்மையை எழுதட்டும். அது முடியாத காரியம் என்கிறீர்களா?

நம்பிக்கையில் தானே நம் வாழ்க்கை ஓடுகிறது.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

68 comments:

suvanappiriyan said...

ஜிஸ்யா வரியைப் பற்றிய மேலும் சில தகவல்கள்!
பேரரசர் அக்பரால் நீக்கப்பட்ட ஜெஸ்யா வரியை மீண்டும் கொண்டுவந்து இந்துக்களை துன்புறுத்தினார் அவுரங்கசீப் - இது ஒரு குற்றச்சாட்டு.

ஜெஸ்யா வரி என்றால் என்ன ? இஸ்லாமிய ஆட்சியில் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய மாற்று சமயத்தவர்களை 'திம்மி 'கள் என்று அழைக்கப்பட்டனர். அத்தகையவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஒரு வரி போடப்பட்டது. அதற்கு ஜெஸ்யா வரி என்று பெயர்.

அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்தது 1658. ஜெஸ்யா வரி போடப்பட்டது ஆட்சிக்கு வந்து 22 வருடம் கழித்து அதாவது 1679 ல். அவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே 80 க்கும்மேற்பட்ட வரிகளை நீக்கியிருக்கிறார்.

அவைகளில் சில: கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; மீன், காய்கறி போன்ற உணவுப்பொருள்களுக்குப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; சாலை வரி, தொழில் வரி, ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.

இத்தனை வரிகளை நீக்கியவர் ஜஸ்யா வரியை ஏன் போடவேண்டும் ?
இதை 'கரைகண்டம் கி. நெடுஞ்செழியன் ' சொல்வதை பார்ப்போம். 'அதுவும் அவர் ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1679 ல் ஜெஸ்யா வரியை விதிக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அரசு பணியில் உள்ளோர், வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்வோர் என எண்ணற்றோர் இந்த வரியிலிருந்து விலக்குப் பெற்றனர். மொத்தத்தில் இந்த வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன ' '.
'இந்த வரி விதிப்பானது இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என்ற நிர்பந்தத்திற்காகவோ, இஸ்லாத்தை இந்த வரிவிதிப்பின் மூலம் நாடு முழுவதும் பரப்பிவிடலாம் என்ற ஆசையினாலோ ஒளரங்கஜேப் இந்த வரிவிதிப்பை அமுல்படுத்தவில்லை. ஆனால் இந்த வரிவிதிப்பின் மூலம் அரசியல் ரீதியாகத் தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்த தக்கான சுல்தான்களைத் திருப்தி படுத்திவிடலாம் என்று ஒளரங்கஜேப் ஒரு அரசியல் கணக்கைப் போட்டார் என்கிறார் பேராசிரியர் சதீஸ் சந்திரா. ' (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்).
பொருளாதார சீர்திருத்தத்திற்காவே ஜெஸ்யா வரி விதிக்கப்பட்டதாகவும் 1705 ம் ஆண்டு இந்த வரியினை அவுரங்கசீப் அடியோடு நீக்கிவிட்டார் என்றும் இந்திய சரித்திரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதிய சர் எலியட் என்ற ஆங்கிலேயே வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
இந்த வரி யாருக்கு எப்படி போடப்பட்டது ?
எல்லா செலவுகளும் போக ஆண்டொன்றுக்கு வருமானத்தில் ரூபாய் 52 மிஞ்சினால் அதற்கு வரி ரூ.3/4. ரூபாய் 250 மிஞ்சினால் வரி ரூ61/2. ரூபாய் 2500 மிஞ்சினால் வரி ரூ 13. அதற்குமேல் வரி இல்லை. இதை நடுத்தர வர்க்கமாக இருந்தால் இரண்டு தவணைகளிலும் சாதாரண வர்க்கமாக இருந்தால் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.
வரி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:
ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை; உழவருக்கு வரி இல்லை; தச்சருக்கு வரி இல்லை; பொற்கொல்லருக்கு வரி இல்லை; கருமாருக்கு வரி இல்லை; கொத்தனாருக்கு வரி இல்லை; கூலி வேலை செய்பவருக்கு வரி இல்லை; அரசாங்க ஊழியருக்கு வரி இல்ல அவர் எந்த பதவியில் இருந்தாலும்; அர்ச்சகர், புரோகிதர், துறவிகள் இவர்களுக்கு வரி இல்லை. (அப்போதெல்லாம் டை கட்டிக்கொண்டு ஆபிஸிலும் பேங்கிலும் உத்தியோகம் பார்க்காத காலம்)

அப்படியானால் வரி வசூலித்தது எவ்வளவு ?
ஒரு புள்ளி விபரம்:
1680-81 ம் ஆண்டில் பாதுஷாபூர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த மக்களின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 1855. அதில் வரி விலக்கு அளிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1320. வரி அளித்தவர்கள் 535 பேர் மட்டுமே. வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 2950.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..

மாஷா அல்லாஹ் அருமையான விளக்கங்கள்....அல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விரிவாக்க போதுமானவன்..

அன்புடன்
ரஜின்

suvanappiriyan said...

தருமி!

//சுவனப்பிரியன் & சார்வாகன்

சார்வாகன் கொடுத்த பட்டியலில் வரும் நபிகள் எல்லோரும் ஒரே ‘இனத்தை’ இடத்தைச் சார்ந்தவர்கள்ள்தானே? ஆனால் நபிகள் பல இனத்திற்கும், உலகின் பல இடத்திற்கும் வந்ததாக இஸ்லாமியர் சொல்வதுண்டே. அது எப்படி?//

ஆபிரஹாமில் இருந்து முகமது நபி வரை தொடராக வருவது, அரபு நாடுகளுக்கும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் அனுப்பப்பட்ட தூதர்களை இனம் காட்டுவதற்க்காகத்தான். குர்ஆனில் பெயர் கூறப்பட்ட தூதர்கள் தோராயமாக 25 மட்டுமே. இது போல் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட தூதர்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டதாக முகமது நபியின் ஹதீதுகளில் காணக் கிடைக்கிறது. மற்ற தூதர்கள் குறிப்பிட்ட இனத்துக்கும் குறிப்பிட்ட மொழிக்கும் அனுப்பப்பட்டவர்கள். முகமது நபி மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும் தூதராகவும் இறுதியாகவும் அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திறக்கு விளக்கிக் கூறுவதற்க்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே தூதர்களை அனுப்பினோம்' - குர்ஆன் 14:4

'முஹம்மதே! உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்' -குர்ஆன் 4:79

suvanappiriyan said...

//மாஷா அல்லாஹ் அருமையான விளக்கங்கள்....அல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விரிவாக்க போதுமானவன்..

அன்புடன்
ரஜின்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரஜின். உங்களின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

suvanappiriyan said...

சார்வாகன்!

//பின் குறிப்பு: அஹமதியா முஸ்லிம்கள் கிருஷ்னரை இறைதூதராக ஏற்று கொள்கிறார்கள். //

அஹமதியாக்கள் காதியானி என்பவரை முஹமது நபிக்கு பின் வந்த தூதராக சித்தரிக்கிறார்கள். இது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக இருப்பதால் அவர்கள் இஸ்லாமிய வட்டத்துக்குள் வர இயலாது. எனவே தான் பாகிஸ்தானில் கூட அஹமதியர்களை தனி மதமாக அங்கீகரித்திருக்கிறார்கள்.

தருமி said...

//மொகலாயர்களின் ஆட்சிக்கு முன் இந்தியாவை ஆண்டவர்களின் ஆட்சியை விட முஸ்லிம்களின் ஆட்சி நிம்மதியாக இருந்ததால்தான் 800 வருடம் இந்தியாவை அவர்களால்ஆள முடிந்தது.
//

a good joke!

தருமி said...

//இஸ்லாமிய அரசர்கள் அந்நியர்கள்; ஆக்கிரமிப்பாளர்கள். நம் நாட்டைப் படையெடுத்து, அடிமைப் படுத்தி, நம்மை ஆண்டவர்கள் - ஆங்கிலேயர்களைப் போல; பிரெஞ்சு நாட்டுக்காரர்கள் போல; போர்த்துக்கீசியவர்கள் போல. இந்த வெள்ளைத் தோல் கொண்ட இவர்கள் எல்லோரும் கிறித்தவர்கள் என்பதற்காக, எந்த நம் நாட்டு கிறித்துவனும் அவர்களைப் போற்றிப் பாடுவதில்லை.

இஸ்லாமிய அரசர்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள். அதோடு நிற்க வேண்டும். ஏன் மதங்களை அவர்கள் மேல் சாற்றி அவர்கள் துதி பாட வேண்டும்? ஜெனரல் டயர் ஒரு கிறித்துவன் என்பதற்காக நம்மூர் கிறித்துவன் ஜெனரல் டயர் தன் கடமையைத்தானே செய்தான் என்று சொல்லி அவனின் பெருமை பேசுவானா?

மதங்களைத் தனித்துப் பாருங்கள். அதை மனிதர்கள் மேல் ஏற்றி, 'என் மதக்காரன் என்றாலே அவன் எனக்கு உறவு' என்று சொந்தம் பாராட்டாதீர்கள். நிச்சயமாக அரசியலோடு மதங்களை இணைக்காதீர்கள். படும் துன்பம் போதும். //


இப்பதிவின் மீதியையும் வாசித்துக் கொள்ளுங்கள். ஏனிந்த ‘வக்காலத்து?’ என்பதுதான் என் கேள்வி. காரணம் என்ன?

தருமி said...

//நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை//
இவருக்காக நீங்கள் இவ்வளவு வருத்தப்பட வேண்டாமே!

//என் நினைவாக எந்த கட்டிடமும் எழுப்பக் கூடாது. //
பின் ஏன் -//சாதாரண செங்கற்களால் கட்டப்பட்ட அவரது கல்லறையை//

//கொடுமை படுத்தியிருந்தாலும் அவை வரலாறுகளில் பதியப் பட்டிருக்குமே! //
அதான் தப்புன்னு சொல்றீங்களே. என் அடுத்த why i am not a muslim-ல் இதற்குப் பதில் உண்டு என்று நினைக்கிறேன்.

//தந்தையை சிறையில் தள்ளியவர்
-சகோதரர்களை கொன்று விட்டு சக்ரவர்த்தியானவர்//
இதுவும் பொய்யா!!?? :( அப்புறம் உண்மைதான் என்னங்க?

தருமி said...

//அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்தது 1658. ஜெஸ்யா வரி போடப்பட்டது ஆட்சிக்கு வந்து 22 வருடம் கழித்து அதாவது 1679 ல். //

அப்போ அவுரங்கஜேப் 22 ஆண்டுகள் தப்பாக, குரானுக்கு எதிராக ஆட்சி நடத்தியிருக்கிறார். சரியா?

தருமி said...

இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறின்னு சொல்றீங்க. ஒரு ஆன்மீக நூல் ஆன்மாவைப் பற்றிப் பேசலாம். அதைவிட்டு விட்டு யாருக்கு யார் வரி கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது; என்ன கலர் சட்டை போடணும்; தாடி வச்சுக்கணும்; எந்த கலர்ல முடி வச்சுக்கணும்; குளியலறையில் எப்படி இருக்கணும்; சிறுநீர் எப்படி கழிக்கணும்; தங்க நகை போடாதே; வெள்ளின்னா பரவாயில்லை; இசை வேண்டாம்; படம் வரையாதே; ... எப்டிங்க இதையெல்லாம் மதத்தோடு போட்டு குழப்பிக்கிட்டு இருகிறீங்க. ஈமான் இருக்கிற ஆளுகளுக்கு சரியா இருக்கும். ஆனால் காபிர்களுக்கு வேடிக்கைதான் இது.

தருமி said...

//ஒளரங்கஜேப்பின்் உயில்மௌலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட .../

நம்ம கருணாநிதியின் கணக்கு மாதிரி இருக்கு!

தருமி said...

சுவனப்பிரியன்
நீங்களும் திருச்சிக்காரனின் பதிவுக்குஒரு தொடுப்பு கொடுத்திருக்கலாம். பின்னூட்டங்கள் போட்ட பின் கஷ்டப்பட்டு அவரது முகவரி தேடிக் கண்டுபிடித்தேன்.


//ஒவ்வொரு இந்தியனும், சக இந்தியரை நல்லெண்ணத்துடன் நோக்கி அவருக்கு உதவி செய்யவே முயலுவோம். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு இந்தியர் இன்னொரு இந்தியரை காக்கவே முயல வேண்டும்.//

இது நல்லா இருக்கு.

suvanappiriyan said...

தருமி!

வெளிநாட்டிலிருந்து வந்து நமது நாட்டில் ஒரு வம்சம் 800 வருடங்களுக்கு மேல் ஆள்வதென்பது சிந்திக்க வேண்டிய விஷயம். பல நவீன ஆயுதங்களை வைத்திருந்து வெள்ளையர்களாலேயே 400 வருடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. தொலை தொடர்பு வசதி இல்லாத அந்த காலத்தில் நமது நாட்டு சிப்பாய்களை வைத்துக் கொண்டே 800 வருடம் அகண்ட பாரதத்தை ஆள முடிந்திருக்கிறது. நமது நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய வெற்றியை அவர்களால் அடைய முடியாது. இதற்கு முன் இருந்த மௌரிய வம்சம், குப்த வம்சம், நமக்குப் பக்கத்தில் இருந்த சேர, சோழ,பாண்டிய, பல்லவ மன்னர்களைக் காட்டிலும் மொகலாயர்களின் ஆளுமைத் திறன் திறம்பட இருந்ததுதான் இதற்க்கெல்லாம் காரணம். அதிலும் ஒளரங்கஜேப் நமது நாட்டை 50 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்திருக்கிறார்.

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் தன் மக்களிடம் எவ்வாறெல்லாம் வரி வசூல் செய்தார் என்பதை வினவின் பதிவில் கூட பார்த்திருக்கலாம். அதே கோமாளித் தனத்தைத்தான் சாஜஹானும் தனது மனைவிக்காக தாஜ்மஹாலைக் கட்டியதும்.

suvanappiriyan said...

தருமி!

ஒரு நல்ல மனிதரை மத வெறியர் போல் காட்ட முயன்றால் உண்மையை விளக்க வேண்டியது நமது கடமையல்லவா! எனவே தான் வக்காலத்து. வெள்ளையர்கள் நமது நாட்டை அடிமையர்க்கி இங்கிலாந்தைக் கொழிக்கச் செய்தனர். மொகலாயர்களோ இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொண்டு இந்நாட்டிலேயே அடக்கமும் செய்யப்பட்டு இந்நாட்டு பிரஜைகளாகவே மாறி விட்டனர். அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்க்காக நான் தூக்கிப் பிடிக்கவில்லை. ராஜபுத்திர பெண்களை திருமணம் செய்து கொள்வதற்க்காக தீன் இலாஹி என்ற புதிய மதத்தையே உண்டாககிய அக்பரையும், தனது மனைவிக்காக மக்கள் பணத்தில் தாஜ்மஹால் கட்டிய சாஜஹானையும் எப்படி முஸ்லிம்களாக கருத முடியும்?

ஒளரங்கஜேப்பின் ஆட்சியில் சவூதியில் மார்க்க அறிஞரிடமிருந்து ஒரு கடிதம வந்தது. அதில் 'மக்கா மதினாவில் அதிகம் வறியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ பொன்னும் மணியும் பாரத சக்ரவர்த்தி அவர்கள் கொடுத்துதவ வேண்டும்' என்ற கோரிக்கை வந்தது. அதற்கு அவர் பதிலளிக்கையில் 'என் நாட்டு மக்களிடமிருந்து பெற்ற வரிப் பணத்தை வேறொரு நாட்டுக்கு எப்படி கொடுக்க முடியும்? அந்த பணத்தை இங்குள்ள என் நாட்டு வறியவர்களுக்கு அளித்தால் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டானா?' என்று பதிலளித்தார். நம் நாட்டின் மீது எந்த அளவு பற்றிருந்தால் இப்படி ஒரு கடிதத்தை எழுதி இருக்க முடியும்.

தருமி said...

சுவனப்பிரியன்,
(நான் மேற்கோள் காட்டிய பதிவைப் படித்தீர்களா? உங்கள் பின்னூட்டத்திற்குரிய பதில்கள் எல்லாமே அதில் இருக்கின்றனவே!)


இஸ்லாமியர்கள் மற்றவர்களிடமிருந்து இப்படி தனித்து நிற்க வேண்டும் என்பது என்ன விதியோ? வருத்தமாக உள்ளது. கீழே உள்ள ஒவ்வொரு வாக்கியமும் எந்த ஒரு இஸ்லாம் அல்லாத இந்தியனுக்கும் நிச்சயம் ஒரு ”வெறுப்பை” மட்டுமே தரும் என்பது என் நம்பிக்கை. மறுபடியும் சொல்கிறேன்: இஸ்லாமியரல்லாத நண்பர்கள் உங்களுக்கு ஒரு வேளை இருந்தால் இந்த வாக்கியங்களை அவர்களிடம் கொடுத்துப் பாருங்கள்; புரியும்.

//*நமது நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய வெற்றியை அவர்களால் அடைய முடியாது. (இதைத்தான் நல்ல ஒரு ஜோக் என்றேன்.)
*மொகலாயர்களின் ஆளுமைத் திறன் திறம்பட இருந்ததுதான் இதற்க்கெல்லாம் காரணம். (அடப்பாவமே!)

*அதே கோமாளித் தனத்தைத்தான் சாஜஹானும் தனது மனைவிக்காக தாஜ்மஹாலைக் கட்டியதும்...(பிறகு என்ன..’ நல்ல அரசுன்னு’ கொடி கட்டுறீங்க!?)
*ஒரு நல்ல மனிதரை மத வெறியர் போல் காட்ட முயன்றால்... (நல்ல மனிதர் என்று பக்கத்திலிருந்து பார்த்தவர் போல் சொல்வது உங்கள் வாதம்; ஏனெனில் அவன் ஒரு இஸ்லாமியன்! உங்களுக்கு அது ஒன்று போதும்

தீன் இலாஹி என்றொரு மதம் படைத்து, மற்ற மதக்காரர்களை மதித்த "நல்ல அரசன் அக்பர்” உங்களுக்குப் 'பாவி’யாகி விட்டார் என்பதைப் பார்க்கும் போதும் மீண்டும் நீங்கள் இஸ்லாமியர் என்பது மட்டுமே நினைவுக்கு வருகிறது.)

.......தொடரும்

தருமி said...

*இந்நாட்டு பிரஜைகளாகவே மாறி விட்டனர்...... (அடடே...!!!இங்கே டேரா போட்டுட்டாய்ங்க; அம்புடுதான். அம்புட்டு புடிச்சி போச்சி! இதிலென்ன நாட்டுப் பற்று? ஆங்கிலேயனும் இன்னும் இங்கே இருந்திருந்தால் அதுக்கும் இதே பதிலைச் சொல்லியிருப்பீர்களோ? நாட்டுப் பற்றுக்கு உங்கள் விளக்கம் உச்சியைக் குளிர வைக்கிறது.)
*நம் நாட்டின் மீது எந்த அளவு பற்றிருந்தால் இப்படி ஒரு கடிதத்தை எழுதி இருக்க முடியும்.// (காசு தரமாட்டேன்னு சொல்ல ஒரு விவரமான, ‘புத்திசாலித்தனமான’ excuse!)

(எல்லா வேறுபாடுகளையும்)மதங்களையும் தாண்டி எந்த வேற்றுமையின்றி ஒவ்வொரு குடிமகனையும் பாதுக்காக்க வேண்டியது எந்த ஒரு அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால் உங்கள் குரான் வேறுபடுத்தி வெறுப்பை வளர்க்கிறது, இது உங்களுக்கு “கடவுளின் வார்த்தைகள்! இது கடவுளைச் சிறுமைப்படுத்தும் ஒன்று. நிச்சயமாக இதில் ஒரு இஸ்லாமியனாக பெருமைப்பட என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்!

உங்களால் எப்பவுமே மதங்களைத் தாண்டி மனிதர்களையும், உண்மைகளையும் பார்க்கவே முடியாதா என்பதும் என் வருத்தத்திற்குரிய கேள்வியாகிறது!

கடவுளே!

தருமி said...

மீண்டும் ...
//தந்தையை சிறையில் தள்ளியவர்
-சகோதரர்களை கொன்று விட்டு சக்ரவர்த்தியானவர்//
இதுவும் பொய்யா!!?? :( அப்புறம் உண்மைதான் என்னங்க?

சீனு said...

இஸ்லாமியர்கள் என்றே 'ஒரே' காரணத்துக்காக முகலாயர்களுக்கு இவ்வளவு ஜல்லி அடிக்கிறீர்களே, உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. என்ன வோ முகலாய மன்னர்கள் எல்லாமே தேவ தூதர்கள் போலவும், அவர்கள் தான் நல்லாட்சியை கொடுத்தார்கள் என்பது போலவும் இப்படி ஜால்ரா அடிக்கறீங்காளே, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையா?

'ஒளரங்கஜேப்' என்று அழைப்பதற்கு பதிலாக 'ஒளரங்கசீப்' என்று அழைக்கப்பட்டதால் நாங்களெல்லாம் பொய்யர்கள். வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்துக்கு ஒரு அதிகாரபூர்வ மறுப்பு வெளியிடுங்களேன், பார்க்கலாம்...

suvanappiriyan said...

'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339

suvanappiriyan said...

பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

'நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.'
இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.

பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.

suvanappiriyan said...

அரசியல் வேறு மதம் வேறு!

ஒளரங்கஜேப்பிடம் அவரது முஸ்லிம் நண்பர்கள் அவரது அரசாங்கத்திலுள்ள இரண்டு முஸ்லிம் அல்லாதவரை அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் காரணமாக பதவியில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று கூறியபோது அதனை ஏற்க மறுத்தவர் ஒளரங்கஜேப். 'அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. அவரவர்கள் அவரவரது மத்தைப் பின்பற்றட்டும்.' என்று சொன்னவர் ஒளரங்கஜேப்.

டி.என.ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்
1950, Page 80

இது போன்று தன் நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட ஒளரங்கஜேப் இந்துக்களைக் கொடுமை படுத்தினார் என்று எழுதுவது நேர்மையான வாதம் தானா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

suvanappiriyan said...

'உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா மட்டத்திலுமுள்ள மக்களின் நலன்களை மேம்படுத்த நாம் சலிக்காமல் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிகுந்த அன்போடும் பரிவோடும் செயல்படுத்தப் பட வேண்டும். நமது புனிதமான சட்டத்தின் படி புராதனக் கொவில்கள் எதையும் அழிக்கக் கூடாது. ' - ஒளரங்கஜேப்

P.N.Pande, Islam And Indian Culture, Page 45

தருமி said...

//'அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. //

பின்னிட்டாருங்க. அவரே சொல்லிட்டார்.
ஒளரங்கஜேப் பின்பற்றியதை ஏன் நீங்களும் பின்பற்றக் கூடாது?

தருமி said...

//நமது புனிதமான சட்டத்தின் படி ...//

தாலிபான் உடைத்த புத்தர் சிலைகள், கஜினி உடைத்த நமது ஊர்க் கோவில்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது!

suvanappiriyan said...

தருமி!

//இஸ்லாமியரல்லாத நண்பர்கள் உங்களுக்கு ஒரு வேளை இருந்தால் இந்த வாக்கியங்களை அவர்களிடம் கொடுத்துப் பாருங்கள்; புரியும்.//

இன்றும் எனக்கு வேற்று மதத்தைச் சார்ந்த நண்பர்கள் நிறையவே இருக்கிறார்கள். எனது இளமைக் காலம் 5 வருடங்கள் ஒரு பிராமணர் வீட்டில் தான் கழிந்தது. அந்த குடும்பத்தவர்களில் ஒருவனாகவே இருந்திருக்கிறேன்.

அடுத்து மொகலாயர்களின் ஆட்சி நடந்த போது இந்தியாவில் முஸ்லிம்களின் சதவீதம் மிகவும் கம்மி. மொகலாயர்களுக்கு அதிகம் ஆதரவளித்தது இந்து நண்பர்களே! உள்நாட்டு மக்களின் வெறுப்பில் 800 ஆண்டு காலம் எந்த ஒரு அரசும் நிலைத்திருக்க முடியாது என்பதைத்தான் சொல்ல வந்தேன்.

suvanappiriyan said...

சீனு!

//இஸ்லாமியர்கள் என்றே 'ஒரே' காரணத்துக்காக முகலாயர்களுக்கு இவ்வளவு ஜல்லி அடிக்கிறீர்களே, உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. //

இந்த நாட்டை 50 வருடம் ஆட்சி செய்தவர். குறு நில மன்னர்களை எல்லாம் வென்று அகண்ட பாரதத்தை உண்டாக்கியவர். பல கோவில்களுக்கு மானியங்களும் அளித்தவர். இந்நாட்டு பெண்ணுக்கு பிறந்து நமது பாரத நாட்டு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு நம் நாட்டிலேயே மரித்த ஒருவரை அவர் முஸ்லிம என்ற ஒரே காரணத்துக்காக வெறுக்கிறீர்களே உங்களை நினைத்து தான் நான் வெட்கப் படுகிறேன்.

மதனுக்கு பலரும் மறுப்பை முன்பே கொடுத்து விட்டார்கள். நான் வேறு என்ன புதிதாக கொடுக்கப் போகிறேன்.

suvanappiriyan said...

உஜ்ஜயினுள்ள சிவ ஆலயத்தில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த நந்தா விளக்கிற்காக தினமும் நான்கு சேர் நெய்யை முகலாய அரசாங்கமே வழங்கி வந்திருக்கிறது. உஜ்ஜயினி மகா கலேஷ்வரர் கோவிலின் அர்ச்சகராயிருந்த தேவ நாராயணனின் கோரிக்கையின் பேரில் இதற்கான உத்தரவு அப்பொது வழங்கப் பட்டிருந்தது.

ஹக்கீம் முகமது மெஹ்தி என்ற அதிகாரி கோவிலின் நந்தா விளக்கிற்குத் தினமும் நான்கு சேர் நெய்வழங்க சபுதரா கொத்வாலின் தாசிலதாருக்கு உத்தரவிட்டுள்ளார். முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப்பின் ஆடசியின் போது இந்த ஆணை அமுலில் இருந்தது.

P.N.pande, Islam And Indian culture, Page 67.

suvanappiriyan said...

குமரகுருபரர்

குமர குருபருக்கு காசியில் கேதார மந்திரமும், கேதாரத் துறையும், அறச்சாலை (குமாரசாமி மடம்) முதலியன அமைத்திட உதவிய முகலாய மன்னர் ஒளரங்க ஜேப்.
-ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த 'நீதி நெறி விளக்கம்', திருப்பனந்தாள் காசி மடம் வெளியீடு,
1960, page 7

ஒளரங்கசீப்பின் ஆடசி காலத்தில் குமர குருபருக்கு தன்ஆன்மீகப் பணிகளை செய்ய அரசே பல உதவிகளை செய்து கொடுத்தது.
-அ.மார்கஸ், இசுலாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள், பாண்டிச்சேரி, 1994, Page 7.

காசியில் குமரகுருபரர் சிவபெருமானுக்குக் கோயில் கட்டி நித்திய நைமித்தியங்களை நடத்தினார். இன்றும் கூட அங்கே தமிழ்நாட்டு முறையில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
-உ.வே.சாமிநாதய்யர், நல்லுரைக்கோவை, இரண்டாம் பாகம்,சென்னை.
1946, page 146.

'ஹிந்து, ஜெயின் ஆலயங்களுக்கும் பூஜீதர்களுக்கும் ஒளரங்கசிப்பால் மான்யங்கள் வழங்கப் பட்டன. ஹிந்து சாதுக்களுக்கும் அறக் கட்டளைகள் அளிக்கப்பட்டன.' - பம்பாயைச் சேர்ந்த ஞானசந்தர் என்பவரின் கூற்று இது.
Pakistan Historical Society, October 1951, Page 247-254

கே.கே.தத்தா என்பவர் ஒளரங்கஜேப் இந்துக்களுக்கும் குறிப்பாக அந்தணர்களுக்கு மானியம் வழங்கியதையும் அது குறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் வரிசைப்படுத்தி புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
K.K.Datta, Some Firmans, Sanads and Parwanas, (1578-1802), Patna, Part 2
1:35 AM

தருமி said...

//இன்றும் எனக்கு வேற்று மதத்தைச் சார்ந்த நண்பர்கள் நிறையவே இருக்கிறார்கள். எனது இளமைக் காலம் 5 வருடங்கள் ஒரு பிராமணர் வீட்டில் தான் கழிந்தது. அந்த குடும்பத்தவர்களில் ஒருவனாகவே இருந்திருக்கிறேன். //

மிக்க மகிழ்ச்சி.
அந்த வீட்டுக்காரர்களிடம் இப்பதிவைக் காண்பித்து, உரைகல் வேலையைச் செய்து பாருங்களேன் - தயவு செய்து.

Anisha Yunus said...

alhamthulillaah. brother,

this is t first time iam coming to ur blog. masha allah. u have such knowledge and detailed facts to present this case. I only wihs if someone can put in money n efforts and prepare a documentary film on the real life and acts of Aurangazeb. Insha Allah. Your works are marvellous, to search in these amount and present it. May Allah reward you with the best of both worlds. Aameen.

wa salam,

தருமி said...

//உங்களை நினைத்து தான் நான் வெட்கப் படுகிறேன். //

வெட்கப்படுவது ஒரு பக்கம் வைத்துவிட்டு, நான் கேட்ட ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் நல்லது.

Saint ஒளரங்கஜேப் மிகவும் நல்லவர் ..
குறு நில மன்னர்களை எல்லாம் வென்று அகண்ட பாரதத்தை உண்டாக்கியவர்... இந்துக் கோவில்களுக்கு நெய் ஊற்றியவர்.ஆனால் அவன் ஒரு வெளிநாட்டு ஆக்கிரமப்பாளன். நம் நாட்டு மன்னர்களைக் கொன்று நம் நாட்டைக் கைப்பற்றியவன், அதாவது க்ளைவ், டயர் மாதிரி. இவனுக்கு எதற்கு இத்தனை துதி? ஏனிந்த வக்காலத்து?
இந்தக் கேள்வியை நம் அடிப்படைவாதி ஆஷிக் சொல்வது போல் திரும்ப திரும்ப திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கிறேனே ... பதில் சொல்லக்கூடாதா?

இன்னொரு கேள்வியும்:
//'அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. //

பின்னிட்டாருங்க. அவரே சொல்லிட்டார்.
ஒளரங்கஜேப் பின்பற்றியதை ஏன் நீங்களும் பின்பற்றக் கூடாது?

suvanappiriyan said...

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.

இதற்க்கெல்லாம் திரு தருமி என்ன பதில் வைத்திருக்கிறார்?

suvanappiriyan said...

தருமி!

வரலாறு தெரிந்தும் தெரியாதது போல் ஏன் நடிக்கிறீர்கள். மொகலாயர்களுக்கு முன்னால் அகண்ட பாரதமே கிடையாது. சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு(அதாவது உங்கள் நாடு), என்று ஊருக்கெல்லாம் ஒரு ராஜாவை வைத்துக் கொண்டிருந்தவர்கள்தாம் நாமெல்லாம். மொகலாயர்கள் வந்தவுடன் 'தம்பிகளா! ஊருக்கெல்லாம் ஒரு ராஜா இருக்கக் கூடாது. வேண்டுமானால் பஞசாயத்து போர்டு தலைவர்களைப் போல் இருந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அகண்ட பாரதத்தை உருவாக்குகிறேன்' என்று கூறி இன்று வல்லரசாக ஆகத் துடித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு ஆணி வேராக இருந்தவர்கள் மொகலாயர்கள். இதை மறுக்க முடியுமா?

சேரர்கள் சோழர்களோடு போரிட்டுள்ளார்கள். சோழர்கள் பாண்டியர்களோடு போரிட்டு நாட்டை பிடித்திருக்கிறார்கள். அதே கதைகள் தான் பல்லவர்களிலிருந்து வடக்கே மௌரியப் பேரரசு வரை. அப்படி என்றால் அவர்களெல்லாம் தேச துரோகிகளா? மொகலாயர்கள் உருவாக்கி தந்த அகண்ட பாரதத்தை வியாபார நோக்கில் வந்து அமர்ந்து கொண்டனர் பிரிட்டிசார். எனவே அவர்களை வெளியேற்றுவது இந்தியர்களாகிய நமது கடமை. இதற்காக முஸ்லிம்களும் போரிட்டிருக்கிறார்கள் பிரிட்டிசாரை எதிர்த்து. எனவே மொகலாயரையும் பிரிட்டிசாரையும் ஒரே தட்டில் வைத்து நம்மால் மதிப்பிட முடியாது.

suvanappiriyan said...

//this is t first time iam coming I only wihs if someone can put in money n efforts and prepare a documentary film on the real life and acts of Aurangazeb. Insha Allah. Your works are marvellous,//

சகோ...அன்னு!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இறைவன் கொடுத்துள்ள செல்வத்தை இது போன்ற வரலாறுகளை திரைப்படமாக எடுக்க நமது செல்வந்தர்கள் முன் வர வேண்டும். 'நான் இத்தனை லட்சத்தில் வீடு கட்டியிருக்கிறேன். என் மகளுக்கு இத்தனை பவுன் சேர்த்து வைத்திருக்கிறேன். நான் இத்தனை வேலிக்கு சொந்தக்காரன்' என்றெல்லாம் பெருமை பேசுவதை விடுத்து இது போன்ற ஆவணங்களை உலக மக்களுக்கு கொண்டு செல்ல நம் செல்வந்தர்கள் முன் வர வேண்டும்.

தொடர்ந்து கருத்தைப் பதியுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தருமி said...

//இதற்க்கெல்லாம் திரு தருமி என்ன பதில் வைத்திருக்கிறார்?//

இதற்கெல்லாம் தருமி எதுக்கு பதில் வைத்திருக்கணும்?!

என்னங்க உங்களோடு கூத்தா இருக்கு? நான் கேட்டது: //ஒளரங்கஜேப் பின்பற்றியதை ஏன் நீங்களும் பின்பற்றக் கூடாது?//

இந்த கேள்விக்கு இதுதான் பதிலா?

தருமி said...

ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறீர்களா இல்லை கேலி செய்கிறீர்களா?

ஏங்க .. பாண்டியனும் சோழனும் சண்டை போடுறதும், எங்கேயோயுள்ள அந்நிய நாட்டான் இங்கு வந்து சண்டை போட்டு “அகண்ட பாரதம்” படைப்பதும் ஒன்றா?

சும்மாவா சொன்னாங்க .. தூங்குறவங்களைத்தானே எழுப்ப முடியும்.

பேசாம அவனுக எல்லாம் இஸ்லாம் காரங்க..அதுனால் நான் அப்படித்தான் சப்போர்ட் பண்ணுவேன்னு சொல்லிட்டீங்கன்னா அதுக்கு மேல பேச ஒண்ணும் இல்லைன்னு போய்டலாம்.

suvanappiriyan said...

//ஏங்க .. பாண்டியனும் சோழனும் சண்டை போடுறதும், எங்கேயோயுள்ள அந்நிய நாட்டான் இங்கு வந்து சண்டை போட்டு “அகண்ட பாரதம்” படைப்பதும் ஒன்றா?//

தருமி சார்! சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று தனித்தனி நாடுகள் இருந்ததும், அவர்களுக்குள் சண்டை நடந்ததும் உண்மையா இல்லையா? ஒரு நாட்டு மக்களின் சொத்துக்களை மற்ற நாடு கொள்ளை அடித்ததா இல்லையா? இங்கு என் நாட்டு அன்றைய மன்னனான ராஜ ராஜ சோழனின் ந்ல்ல குணங்களை பட்டியலிட்டால் சேர நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் நான் துரோகி ஆவேனா? அப்படியானால் சேர நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் ராஜ ராஜ சோழன் பகை நாட்டவனா? இன்னும் தெளிவாக கேட்கிறேன். முகலாயர்களின் ஆட்சிக்கும் முன்னால் உலக நாடுகள் அங்கீகரித்த நமது நாட்டின் வரை படத்தை தாருங்கள். அல்லது முகலாயர்களுக்கு முன்னால் இந்த அகண்ட பாரதத்தின் மன்னன் யார்? என்ற விபரத்தையும் தாருங்கள். ஆசிரியரான உங்களுக்கு இது சுலபமானதுதானே! ராஜராஜ சோழனையும் ஒளரங்கஜேப்பையும் எந்த வகையில் வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?

//சோழரும் பாண்டியரும் சண்டை போட்டார் என்றால், அது படைகளுக்குள் நடை பெற்ற சண்டை.//-  திருச்சிக்காரரின் இந்த வார்த்தையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

//அந்தக் கொள்கைகள் படிதான் அரசை அமைக்க வேண்டும் என்று தினமும் பாடி வருகிறீர்கள். இல்லையா?//

இஸ்லாமிய அரசுக்குத்தான் குர்ஆனின் சட்டத்தை மக்கள் மேல் திணிக்க அதிகாரம் உண்டு. ஒளரங்கஜேப் ஆட்சி செய்தது இஸ்லாமிய ஆட்சியே அல்ல. 100 சதவீதம் முஸ்லிம்களே உள்ள சவுதி அரேபியாவில் கூட இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை. ஓரளவு சிவில் சட்டத்தையும் குற்றவியல் சட்டத்தை மட்டும் நடைமுறைபடுத்துகிறார்கள். எனவே இஸ்லாமிய ஆட்சி அமையும்போதுதான் குர்ஆனின் சட்டம் என்ற பேச்சுக்கே இடம் வரும். இப்பொழுது நாம் அகண்ட பாரதத்தைப் பெற்று விட்டோம். இந்த நேரத்தில் பாகிஸ்தான் நம் மீது போர்தொடுத்து வந்தால் என் நாட்டுக்காக அவர்களை எதிர்த்து நின்று உயிரையும் விடத் தயாராக இருப்பேன். இந்த வேளையில் நான் நம் நாட்டுக்காக உழைக்காமல் முஸ்லிம் நாடு என்ற காரணத்தினால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்தால் அப்பொழுதுதான் என் நாட்டுக்கு துரோகம் இழைக்கிறேன். இஸ்லாத்தின் பார்வையிலும் சொந்த நாட்டுக்கு அநியாயமாக துரோகம் இழைப்பது பச்சை துரோகமாகும்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//நண்பர் சுவனப் பிரியன் அவுரங்கசீப் ஜிஸியா வசுலிததை சரி என்கிறாரா? ஜிஸியாவை உலகம் முழுவதும்(தலிபான் நீங்கலாக) பின்பற்றவில்லையே என்று கவலைபடுகிறார?.//

முஸ்லிம்கள் தனது வருமானத்தில் 2.5 சதவீதம் வரியாக அரசாங்கத்துக்கு செலுத்தும்போது மற்ற மதத்தவர்கள் எந்த வரியும் கொடுக்காமல் இருப்பது நீதிதானா? முஸ்லிம்களிடம் வரி வசூலிக்காமல் ஹிந்துக்களிடம் மட்டும் ஒளரங்கஜேப் வரி வசூலித்திருந்தால் உங்கள் வாதத்தில் நியாயம் இருக்கும்.

தாலிபான்கள் எங்கு ஜஸியா வரியை அமுல்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடம்தான் ஆட்சியே இல்லையே! அடுத்து தாலிபான்கள் செயல்கள் அனைத்தும் இஸ்லாத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. பெண்களுக்கு கல்வி கொடுக்க மறுத்தல், கஞ்சா அபின் மூலம் வரும் வருமானத்தை அங்கீகரித்தல், அப்பாவி பொது மக்களை கொல்லுதல் என்று அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி வெகுநாட்களாகிறது.

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//ஆனால் சமணர்கள் கொடுமைப் படுத்தப் பட்டதாக , கழுவில் ஏற்றப் பட்டதாக சொல்லப் படுவதற்கு வரலாற்று ஆதாரமோ, சமூக செய்தி ஆதாரமோ இல்லை. இந்திய வரலாற்றில் சமணர்கள் கழுவில் ஏற்றப் பட்டதாக குறிப்பு இல்லை. இன்னும் முக்கியமாக சொல்லப் போனால் சமணர்களே அவர்களின் சமய வரலாற்றில் இதைப் பற்றிய குறிப்பு எதையும் வைக்கவில்லை. எந்த ஒரு மதத்தை செர்ந்தவராவது தங்கள் மதத்தினர் முன்பு தாக்கப் பட்டு இருந்தால் அதைப் பற்றிய குறிப்பை அறிவிக்காமல் இருப்பார்களா?//

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.

தருமி said...

//ராஜராஜ சோழனையும் ஒளரங்கஜேப்பையும் எந்த வகையில் வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?//

இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் முன் உங்கள் அறிவு, மனசாட்சி இரண்டில் எதை ஐயப்படுவது என்று எனக்குத் தெரியவில்லை.

மகா மோசமான, எந்த சமூக அறிவிற்கும், பொது அறிவுக்கும் புறம்பான கேள்வி இக்கேள்வி. உங்களுக்கு இந்த இருவரும் ஒன்றுதான் என்றால் அந்த மனசாட்சி உள்ள ஆளிடம் பேச எனக்கு ஒன்றுமில்லை........

உங்கள் பூனைக்கு மூன்று கால்தான்; ஒத்துக் கொள்கிறேன்.

தருமி said...

ராபர்ட் க்ளைவ் - நல்லவர்;

ஜெனரல் டயர் - மிக மிக நல்லவர்:

ஒளரங்கஜேப் - மிக மிக மிக மிக நல்லவர்.

புரிந்து கொண்டேன்.

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

நாங்கல், நீங்கல் தமிழ் இலக்கணப்படி தவறு நாங்கள், நீங்கள் என்று திருத்திக் கொள்ளுங்கள்.

//உலகில் எந்த ஒரு மனிதனையும் குறிப்பிட்ட மதத்தை அனுசரிக்க பலவந்தமாக வற்புறுத்தக் கூடாது என்கிறோம். உலகில் இந்துவோ, கிரிஸ்துவனோ, சொராச்டிரியரொ, யூதரோ, இச்லாமியரோ, பவத்தரோ.... யாராக இருந்தாலும், அவர்கள் மத அடிப்படையிலே,பிறர் மீது பொருளாதர அடக்குமுறையோ, வன்முறையோ, தாக்குதலோ, அச்சுறுத்தலோ, வெறுப்புணர்ச்சி தூண்டுதலோ செய்வது காட்டுமிராண்டித்தனத்தை விட கொடூரமான , மனித நேயமற்ற செயல், இரக்கமற்ற செயல் என்று சொல்கிறோம். திரு. சுவனப் பிரியன் அவர்களே இந்தக் கருத்து உஙகளுக்கு ஒப்பா? இதை மனப் பூர்வமாக வழி மொழிகிறீர்களா? உங்கள் பதிலை எதிர்பார்க்கிரேன்!//

உங்களின் அனைத்து வாதங்களையும் நானும் ஒத்துக் கொள்கிறேன். இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!

விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.

ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். 'இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்' என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.

மேலும் 'தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்' சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு.

“….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”

உளள்த்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.

Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249

இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது 'இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.'என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.

History Of Aurangzeb, Page 249.

'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.'- குர்ஆன் 2:256

suvanappiriyan said...

//ராபர்ட் க்ளைவ் - நல்லவர்;

ஜெனரல் டயர் - மிக மிக நல்லவர்:

ஒளரங்கஜேப் - மிக மிக மிக மிக நல்லவர்.

புரிந்து கொண்டேன்.//

தருமி சார்!

'யாதும் ஊரே யாவரும் கேளீர்'

இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்கள்தான். எனவே உலக மக்கள் அனைவரிடத்திலும் நாம் அன்பு செலுத்துவோம். தவறான பாதையில் செல்பவர்களை கண்டிப்போம். தண்டிப்போம். அது ராஜராஜ சோழனாக இருந்தாலும். ராபர்ட் கிளைவாக இருந்தாலும். ஒளரங்கஜேப்பாக இருந்தாலும். இந்த மனநிலைக்கு வந்து விட்டால் நான் வைக்கும் வாதங்களில் உள்ள நியாயத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். வெளியே வந்த பூனைக்குட்டியும் உள்ளே சென்று விடும்.

suvanappiriyan said...

வால்பையன்!

//பார்பணீயத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல, இஸ்லாமும்!//

'பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்' - மனு த.சா.ஆ .1 சு., 100 என்றும் 'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270) என்றும் 'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

'மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.'-குர்ஆன் 49:13.

'உங்களில் எவர் பயபக்தி உடையவராக இருக்கிறாரோ இறைவனிடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்' - குர்ஆன் 49:13

என்று கூறும் குர்ஆனை இந்து மதத்தோடு எப்படி ஒப்பிடுகிறீர்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் அனைவர் மீதும் அமைதி நிலவட்டுமாக.

@ போலி நாத்திக வேஷம்போட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றும் தருமி என்ற ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாதிக்கு:

ஹிட்லர் - கெட்டவர்
நீரோ - மிக கெட்டவர்
மோடி - மிக மிக கெட்டவர்

இப்படி மக்களுக்கு உபயோகமாகவும் கொஞ்சம் எழுதுங்களேன், நெஞ்சில் துணிவிருந்தால்...

விவாதியுங்களேன், எழுத்தில் பழுத்த நேர்மை இருந்தால்...

தமிழக மீனவர்கள் உயிர்மட்டும்தான் மனித உயிரா? அப்பாவி குஜராத் முஸ்லிம்கள் உயிர்... உங்களுக்கு .யிரா?

சிங்களன் மட்டும்தான் கொடூரமானவனா? மோடி ரொம்ப நல்லவனோ?

தயவு செய்து இனி முஸ்லிம்கள் விஷயத்தில் நாத்திக வேஷம் போட்டுக்கொண்டு காவித்தனம் செய்ய வேண்டாம்... ஆர்.எஸ்.எஸ்.அம்பி தருமி..!

இதுவரை இந்தியாவை பிடித்து ஆட்டும் காவி பயங்கரவாத்தைதை எதிர்த்து ஒரு பதிவு...? இல்லை... ஒரு பின்னூட்டம்..? அதுகூட போட்டதாக நினைவு இல்லை... ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி தருமி.

எத்தனை வருஷம்தான் ஊரை ஏமாற்றித்திரிவாரோ?

suvanappiriyan said...

சார்வாகன்!

//1.ஒரு ஆட்சியில் வரி வசுலித்தால் மத பாகுபாடு இல்லாமல் எல்லாரிடமும் ஒரே மாதிரி வருமானத்திற்கு தகுந்தது போல் வசுலித்து இருந்தால் இது பிரச்சினையே இல்லை. ஆனால் அப்படி இல்லை

2. முஸ்லிம் அல்லாத மக்கள் அவுரங்கசீப் ஆட்சியில் முஸ்லிம்களை விட குறைவாக வரி கட்டினார்கள் என்று சொன்னால் ஆதாரம் தாருங்கள்.//

இஸ்லாம் கட்டச் சொல்லும் 2.5 சதவீத வரியை இந்துக்களையும் கட்டச் சொன்னால் 'இஸ்லாமிய சட்டத்தை எங்கள் மீது ஏன் புகுத்துகிறீர்கள்' என்று இந்துக்கள் எதிர்க்க மாட்டார்களா? அங்கும் பிரச்னை வரும் அல்லவா? எனவேதான் இந்துக்களுக்கு ஜிஸியா வரியும், முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத வரியும்.

பொருளாதார சீர்திருத்தத்திற்காவே ஜெஸ்யா வரி விதிக்கப்பட்டதாகவும் 1705 ம் ஆண்டு இந்த வரியினை அவுரங்கசீப் அடியோடு நீக்கிவிட்டார் என்றும் இந்திய சரித்திரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதிய சர் எலியட் என்ற ஆங்கிலேயே வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

இந்த வரி யாருக்கு எப்படி போடப்பட்டது ?
எல்லா செலவுகளும் போக ஆண்டொன்றுக்கு வருமானத்தில் ரூபாய் 52 மிஞ்சினால் அதற்கு வரி ரூ.3/4. ரூபாய் 250 மிஞ்சினால் வரி ரூ61/2. ரூபாய் 2500 மிஞ்சினால் வரி ரூ 13. அதற்குமேல் வரி இல்லை. இதை நடுத்தர வர்க்கமாக இருந்தால் இரண்டு தவணைகளிலும் சாதாரண வர்க்கமாக இருந்தால் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.
வரி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:
ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை; உழவருக்கு வரி இல்லை; தச்சருக்கு வரி இல்லை; பொற்கொல்லருக்கு வரி இல்லை; கருமாருக்கு வரி இல்லை; கொத்தனாருக்கு வரி இல்லை; கூலி வேலை செய்பவருக்கு வரி இல்லை; அரசாங்க ஊழியருக்கு வரி இல்ல அவர் எந்த பதவியில் இருந்தாலும்; அர்ச்சகர், புரோகிதர், துறவிகள் இவர்களுக்கு வரி இல்லை. (அப்போதெல்லாம் டை கட்டிக்கொண்டு ஆபிஸிலும் பேங்கிலும் உத்தியோகம் பார்க்காத காலம்)
அப்படியானால் வரி வசூலித்தது எவ்வளவு ? ஒரு புள்ளி விபரம்:
1680-81 ம் ஆண்டில் பாதுஷாபூர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த மக்களின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 1855. அதில் வரி விலக்கு அளிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1320. வரி அளித்தவர்கள் 535 பேர் மட்டுமே. வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 2950.

அதே நேரம் முஸ்லிம்கள் தங்களது வருமானத்தில் 2.5 சதவீதம் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதன்படி பார்த்தால் முஸ்லிம்கள் தான் அதிகம்வரி செலுத்தியிருக்கிறார்கள். சில காலங்களுக்குப் பிறகு ஜிஸியா வரியை அடியோடு ஒளரங்கஜேப் எடுத்து விட்டதையும் வரலாறுகளில் நாம் பார்க்கிறோம்.

//3 தலிபான் சீக்கிய மக்களிடன் ஜிஸியா வசுலித்த செய்தி
4.தலிபான் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போராடுவதாக சொல்கிறார்கள்.//

நான் முன்பே தாலிபான்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று விளக்கியும் இருக்கிறேன். யார் என்ன அறிக்கை விட்டாலும் குர்ஆனுக்கு மாற்றமாக நடக்கும் எந்த ஆட்சியும் இஸ்லாமிய ஆட்சியாக முடியாது.

suvanappiriyan said...

//ஓ! அப்படி வேற இருக்கா!//

''நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.'-குர்ஆன் 49:13.''

என்ற முழு வாக்கியத்தில் பாதியை மட்டும் எடுத்துப் போடுகிறீர்களே! வாத்தியாரே! உங்களுக்கே இது நியாயமாகப் படுதா!:-(

தருமி said...

//
''நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.'-குர்ஆன் 49:13.''

என்ற முழு வாக்கியத்தில் பாதியை மட்டும் எடுத்துப் போடுகிறீர்களே! வாத்தியாரே! உங்களுக்கே இது நியாயமாகப் படுதா!:-( //

அன்பரே..

முழுவாக்கியமோ அரை வாக்கியமோ அதில் அல்லா ந்ம்மையெல்லாம் பிரித்து பிளவு படுத்தி //உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்// என்ற வார்த்தைகல்தானே முக்கியம். அதனால் அப்படியிட்டேன். முழுவாக்கியம் போட்டாலும் அர்த்தம் ஏதும் மாறுகிறதா ... இல்லையே!

தருமி said...

//முன்பே தாலிபான்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று விளக்கியும் இருக்கிறேன்//

நீங்களாகவே இப்படி சொல்லிட்டா சரியாப் போச்சா. எவரும் இஸ்லாமிய நம்பிக்கையோடு இருந்தால் அவர்கள் இஸ்லாமியர்கள் என்று நீங்கள்தானே சொல்வீர்கள். அதோடு அவங்க எல்லாம் எம்புட்டு தாடி - நபி சொன்னது மாதிரி - வச்சிருக்காங்க!

suvanappiriyan said...

தருமி!

//முழுவாக்கியமோ அரை வாக்கியமோ அதில் அல்லா ந்ம்மையெல்லாம் பிரித்து பிளவு படுத்தி //உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்// என்ற வார்த்தைகல்தானே முக்கியம். அதனால் அப்படியிட்டேன். முழுவாக்கியம் போட்டாலும் அர்த்தம் ஏதும் மாறுகிறதா ... இல்லையே!//

உலகில் வெள்ளையர், கருப்பர், உயரமானவர்,குட்டையானவர், உதடு தடித்தவர், மூக்கு சப்பையானவர், என்றெல்லாம் இறைவன் மனிதர்களை வகைப்படுத்தியிருப்பது நாம் ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்வதற்க்காகவே! 500 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் மனித குலத்துக்கு இது தேவையும் கூட. ஆனால் ஒரு சிலர் இந்த பாகுபாட்டையே நீ காலில் பிறந்தவன், நீ வயிற்றில் பிறந்தவன், நான் மட்டும் நெற்றியில் பிறந்தேன். நான் பிராமணன், நீ சூத்திரன். நீ கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி வரக் கூடாது என்று சொல்லும்போதுதான் பிரச்னையே! இதை இறைவன் சொல்லவில்லை. இறைவன் பெயரால் மனிதர்கள் கட்டிய கற்பனை கோட்டைகள்.

//நீங்களாகவே இப்படி சொல்லிட்டா சரியாப் போச்சா. எவரும் இஸ்லாமிய நம்பிக்கையோடு இருந்தால் அவர்கள் இஸ்லாமியர்கள் என்று நீங்கள்தானே சொல்வீர்கள். அதோடு அவங்க எல்லாம் எம்புட்டு தாடி - நபி சொன்னது மாதிரி - வச்சிருக்காங்க!// ஆட்டுக்கு கூடத்தான் தாடி இருக்கிறது. சாமியார்களும் தாடி வளர்க்கிறார்கள். பெரியாருக்கு அதை விட பெரிய தாடி இருந்தது. இஸ்லாமிய சட்டத்தை தவறாக விளங்கிக் கொண்டு செயல்படுவதற்கும்,இஸ்லாமிய சட்டத்தை நடைமுறை படுத்துவதற்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. பொது மக்களை கொல்வதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? போதை பொருட்களின் வருமானத்தை அங்கீகரிக்கும் இவர்கள் எப்படி இஸ்லாத்தினுள் இருக்க முடியும்? பெண் கல்வியையும் தடுக்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு இங்கு

சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.சுவனப்பிரியன்,
நீங்கள் இன்னும் ஆயிரம் பின்னூட்டம் போட்டாலும் இன்னும் அடிப்படையையே புரிந்து கொள்வதே இல்லை அவர்கள்...

////////On Tuesday, February 08, 2011 10:52:00 PM ,
குடுகுடுப்பை said...

சுவனப்பிரியன்
இந்தியாவை ஒரு இந்து நாடு என்று அறிவித்து, இந்துக்களின் மத விதியில் பிச்சையிடுதல் இருக்கிறது, ஆனால் முஸ்லீம்களை கட்டாயப்படுத்தமுடியாது என்று சொல்லி அவர்கள் மீது இந்துக்களாக மாறும் வரை பிச்சை வரி விதிப்பது என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் ஒத்துக்கொள்வீர்களா?//////
---இந்த பின்னூட்டமே அதற்கு சாட்சி, இதையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு அழுகை வரவில்லையா?

நான் படித்த இஸ்லாமிய பள்ளியில் முஸ்லிம் மாணவர்களை 'ஒழுக்கப்பயிற்சி வகுப்பு' என்று மஸ்ஜிதுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கே குர்ஆன், ஹதீஸ் இவற்றை சொல்லி பயான் நடக்கும். மாற்று சமய மாணவர்களுக்கு வகுப்பிலேயே பாட்டு கிளாஸ் நடக்கும்.

அதுப்போலத்தான் ஒருத்தருக்கு ஜகாத் மற்றவருக்கு ஜிஸ்யா. ஜகாத்தைவிட ஜிஸ்யா அதிகமாய் இருந்தால் மட்டுமே ஆட்சேபம் வரவேண்டும். மாறாக ஜகாத்தைவிட ஜிஸ்யா ரொம்ப ரொம்ப கம்மி.

குடுப்பைக்காரர் கேட்டகேள்விக்கு என் பதில்...

ஒத்துக்கொள்வேன்...
ஒத்துக்கொள்வேன்... ஒத்துக்கொள்வேன்...

ஏனெனில், என் சக இந்தியன் மட்டும் வரி கட்ட நான் வரி ஏய்க்கும் மோசக்காரன் ஆக மாட்டேன். ஜகாத் அளவையும் கொடுத்து அதையும் கட்டவும் தயங்க மாட்டேன். கூடவாக இருந்தாலும்..! முடியாது என்ற நிலையில் நாட்டைவிட்டு ஹிஜ்ரத் செய்து விடுவேன். இதுதான் இஸ்லாம்.

மற்றவனின் வரியில் மட்டும் அமைக்கப்பட்ட அத்தனை அரசு உள்கட்டுமானங்களையும் நானும் அனுபவித்துக்கொண்டு வரி கட்டாமல் போக இஸ்லாம் எனக்கு கற்றுத்தரவில்லை.

அவ்வளவு ஏன்...? சகோ? எந்த பாளிசியும் போடாமல், வருமானத்துக்கு அப்படியே இருபது சதவீதம் வருமான வரியும் கட்டி மேலும் இரண்டரை அல்லது அந்து அல்லது பத்து சதம் என்று ஜகாத்தும் கொடுக்கிறோமே இந்திய முஸ்லிம்கள்? இதெல்லாம் இவர்களிடம் சொன்னால் "இழிச்சவாயணுங்கன்னு சொல்லி" சிரிப்பார்கள்... நம்மைப்பார்த்து.

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்... நாம் மறுமைக்காக வாழ்வோம் சகோ. அங்கே மொத்தமாய் சேர்த்துவைத்து சிரிப்போம் இன்ஷாஅல்லாஹ்.

suvanappiriyan said...

ஆசிக்!

உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்! நீங்கள் சொன்னது போல் மறுமையில் சேர்த்து சிரிப்போம். கூடிய வரை அந்த சிரிப்பில் இந்த நண்பர்களையும் இணைத்துக் கொள்ள பிரார்த்திப்போம். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

Zeb-un-Nissa, daughter of Mughal emperor “Aurangzeb” (known as Alamgeer), was born during the reign of Shah Jahan. Her mother was Delras Banoo, daughter of Shahnawaz Safavid.

Her father Aurangzeb charged Mariam, one of the women of court, with the education of Zeb-un-Nissa. Through her efforts, Zeb-un-Nissa memorized the Quran in three years. Then she learned the sciences of the time with Mohammad Saeed Ashraf Mazandarani. Zeb-un-Nissa learned Philosophy, Astronomy and Literature, and knew Persian, Arabic and Urdu. She had a good reputation in calligraphy as well.

Zeb-un-Nissa started to narrate poems in Persian from the age of 14, but as her father did not like poetry, she used to write secretly. Ustad Bayaz, one of her teachers, found her poems and then encouraged her to continue narrating poems. It is reported that in the court of Aurangzeb, there used to be hidden literary and poetic parties among the great poets like Ghani Kashmiri, Naimatullah Khan and Aqil Khan Razi, and Zeb-un-Nissa participated secretly in these parties.

When Aurangzeb became the emperor after Shah Jahan, Zeb-un-Nissa was 21-years old. Aurangzeb found out about the talent and capacity of his daughter and began to discuss the political affairs of his Empire with her, listening to her opinions. It has been mentioned in some books that Aurangzeb sent all the royal princes for the reception of Zeb-un-Nissa each time she entered the court. Zeb-un-Nissa had four other sisters: Zeenat-un-Nissa, Badr-un-Nissa, Mehr-un-Nissa and Zebdat-un-Nissa. Among them, Zeenat-un-Nissa and Zebdat-un-Nissa wrote poems too.
Zeb-un-Nissa did not get married and remained single until her death, despite the fact she had many suitors. She spent all her life on literary works and poetry, as she herself says:
Oh Makhfi, it is the path of love and alone you must go - No one suits your friendship even if Jesus be though
In some books it has been written that there were secret love relation between Zeb-un-Nissa and Aqil Khan Razi, a poet and the governor of Lahore, but it is far from the truth. Even in her poetic book (Diwan), we cannot find a single Ghazal which supports this point. In fact, all her poems are based on the Sufi concept of Love of God.

Zeb-un-Nissa lived in a period when many great poets were at the peak of their reputation; e.g. Mawlana Abdul Qader Bedil, Kalim Kashani, Saa’eb Tabrizi and Ghani Kashmiri. We notice the influence of Hafez Sherazi’s style on the poetry of Zeb-un-Nissa. However, she is considered as one of the poets of Indian School of Poetry in Persian.

Zeb-un-Nissa selected “Makhfi” (which means Hidden one in Persian) as her pen-name in her poetry. In addition to her poetic book or collection of poems, called Diwan, which contains approximately 5,000 verses, she has also written the following books: “Monis-ul-Roh”, “Zeb-ul Monsha’at” and “Zeb-ul-Tafasir”. In Maghzan-ul Ghara’eb, the author writes that the poetic book of Zeb-un-Nissa contained 15,000 verses. Her poetic book was printed in Delhi in 1929 and in Tehran in 2001. Its manuscripts are in National Library of Paris, Library of the British Museum, Library of Tübingen University in Germany and in the Mota Library in India.

Zeb-un-Nissa died in 1701 in Shahjahanabad (old Delhi), while Aurangzeb was in trip to Deccan. Her tomb was in the garden of "Thirty thousand trees", outside of the Kabuli Gate. But when the railway line was laid out at Delhi, her tomb was shifted to Akbar's mausoleum at Sikandara, Agra.

-THANKS WIKIPEDIA.

குடுகுடுப்பை said...

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்... நாம் மறுமைக்காக வாழ்வோம் சகோ. அங்கே மொத்தமாய் சேர்த்துவைத்து சிரிப்போம் இன்ஷாஅல்லாஹ்.
//
நன்றாக சிரியுங்கள், இப்போதைக்கு காபிர்கள் கண்டுபிடித்து விளம்பரம் செய்துகொள்ளுங்கள்.

என்னைப்பார்த்து நீங்கள் அடிப்படயை புரிந்துகொள்ளவில்லை என்ற நகைப்பு எனக்கு சிரிப்பையே வரவழைக்கிறது.

குடுகுடுப்பை said...

குடுப்பைக்காரர் கேட்டகேள்விக்கு என் பதில்...

ஒத்துக்கொள்வேன்...
ஒத்துக்கொள்வேன்... ஒத்துக்கொள்வேன்...

ஏனெனில், என் சக இந்தியன் மட்டும் வரி கட்ட நான் வரி ஏய்க்கும் மோசக்காரன் ஆக மாட்டேன். ஜகாத் அளவையும் கொடுத்து அதையும் கட்டவும் தயங்க மாட்டேன். கூடவாக இருந்தாலும்..! முடியாது என்ற நிலையில் நாட்டைவிட்டு ஹிஜ்ரத் செய்து விடுவேன். இதுதான் இஸ்லாம்.
//
அனைவரும் வரி கட்ட அரசியல் அனைவருக்கும் ஒரே சட்டம்தான், முஸ்லீம் ஜகாத் கொடுப்பதோ இந்து பிச்சைபோடுவதோ அரசியலுக்கு வெளியே இருக்கவேண்டும்.

குடுகுடுப்பை said...

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்... நாம் மறுமைக்காக வாழ்வோம் சகோ. அங்கே மொத்தமாய் சேர்த்துவைத்து சிரிப்போம் இன்ஷாஅல்லாஹ்.
//
ஆஷிக் உங்களை விட நல்ல மனிதர் ஒருவர் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றாத ஒரே காரணத்திற்காக அல்லா நரகத்திற்கு அனுப்பினால் அது சரியா, இந்தக்கேள்விக்கு மதங்களைத்தாண்டி விடைகாண முயற்சி செய்யுங்கள்.

தருமி said...

//Zeb-un-Nissa started to narrate poems in Persian from the age of 14, but as her father did not like poetry,

in the court of Aurangzeb, there used to be hidden literary and poetic parties //

நல்ல அரசர் .. நல்ல மதக்கோட்பாடு ... நல்ல ஆட்சி ...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.குடுகுடுப்பை.

உங்களின் இந்த கேள்வி உங்களுக்கு மட்டுமல்ல இஸ்லாம் பற்றி சிந்திக்கும் அனைத்து முஸ்லிம்களுக்குமே உண்டு.

சிறு வயதில், நான் பெரியவவர்களிடம் இப்படி கேட்டதுண்டு... "கடையெழு வள்ளல்கள், திருவள்ளுவர், புத்தர், காந்தி, ஏசு இவர்கள் எல்லாருமே கடைசியில் நரகம்தான் போவார்களா..?"--என்று.

"ஏசு முஸ்லிம்தான்... அவர்தான் நம் ஈசா நபி(அலை)... அவர் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டவர். அவர் சுவனம் புகுவார் என்று இறைவனே கூறிவிட்டான். ஆனால், மற்றவர்கள்... வந்து... வந்து... அப்படித்தான்... நீ சொன்னபடிதான்.. அல்லாஹ் சொல்கிறான்".--என்று சொல்லப்படும் பதிலில் "ஏன் இறைவனுக்கு அவ்வளவு கோபம் வருகிறது... தம்மை ஏற்றுக்கொள்ளாதவரிடம்...?" --என்ற கேள்வி பலகாலம் என்னுள்ளே புகைந்து கொண்டேதான் இருந்தது.

பின்னாளில் இஸ்லாமிய கிரந்தங்களில் விடை கிடைத்ததாலும் அதை மற்றவர்க்கு எப்படி விளக்கி சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் இருந்தேன்.

கடந்த 2005-ல், நான் ஹஜ் சென்றிருந்த சமயம், அரஃபா வெளியில் எங்கள் குழுவிற்கு தலைமை தாங்கிய ரியாத் இமாம் பஷீர் மவுலவி தன்னுடைய ஒரு சொற்பொழிவில் மிக அழகிய விளக்கம் ஒன்று சொன்னார். அது சற்று நீளமானது...

அதை, உங்களுக்கான மற்றும் அனைவருக்குமான பதிலாக இன்ஷாஅல்லாஹ் விரைவில் என் தளத்தில் அதை ஒரு பதிவாக பதிகிறேன்.

உங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

suvanappiriyan said...

குடுகுடுப்பை!

//ஆஷிக் உங்களை விட நல்ல மனிதர் ஒருவர் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றாத ஒரே காரணத்திற்காக அல்லா நரகத்திற்கு அனுப்பினால் அது சரியா, இந்தக்கேள்விக்கு மதங்களைத்தாண்டி விடைகாண முயற்சி செய்யுங்கள்.//

'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள்,மற்றும் இறைத்தூது சென்றடையாத நல்லோர்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.'
-குர்ஆன் 2:62

இந்த வசனத்தை பல முறை சிந்தித்து பாருங்கள் நண்பரே! யூதராக இருந்தாலும், கிறித்தவராக இருந்தாலும், இறைத்தூதே கிடைக்காதவராக இருந்தாலும் இறைவனையும் மறுமையையும் நம்பி தூய உள்ளத்தோடு ஒருவர் நல்லறங்கள் செய்தால் அதற்குரிய கூலி அவருக்கு உண்டு என்று இறைவன் பதிலளிப்பதை பார்க்கவில்லையா?

நாத்திகத்துக்கு வருவோம். அறிவியல் பூர்வமாக இறைவன் இருக்கிறான் என்பதற்கு நான் ஆதாரங்களை முந்தய பதிவில் தந்திருக்கிறேன். இந்த உலகம் உருவானது எவ்வாறு என்பதை அறிவியல் பூர்வமான நிரூபணத்தை அந்த பதிவிலேயே வால்பையனிடமும்,ராஜனிடமும் கேட்டிருந்தேன். இன்று வரை பதில் இல்லை. 'புரோகிதர்கள் புடை சூழு மந்திரம் ஒலிக்க ராஜனின் கல்யாணத்தை எப்படி நடத்தலாம்?' என்று பலரும் கேள்வி கேட்பதால் அவர்கள் அதில் பிஸியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நீங்களும் பகுத்தறிவுவாதிதானே! நீங்களாவது சொல்லுங்களேன்.

suvanappiriyan said...

தருமி!

///Zeb-un-Nissa started to narrate poems in Persian from the age of 14, but as her father did not like poetry,

in the court of Aurangzeb, there used to be hidden literary and poetic parties //

நல்ல அரசர் .. நல்ல மதக்கோட்பாடு ... நல்ல ஆட்சி ...///

'கவிதைக்கு பொய்யழகு' என்று கவிப்பேரரசு வைரமுத்து சொன்னதை மறந்து விட்டீர்களா? ஒரு கவிதையில் பொய்களையும், அலங்கார வார்த்தைகளையும் சேர்த்து கோர்த்தால்தான் உங்களால் ரசிக்கவே முடியும். 'வானுயர்ந்த கோபுரம்', 'அன்னம்போல் நடை', 'குயில் போல் குரல்' என்றெல்லாம் மிகைப்படுத்தி பாடுவது கவிஞர்களின் வேலை. கண்ணதாசனுக்கு சரக்கு உள்ளே இறங்கினால்தான் கவிதையே வருமாம். கவிஞர்கள் நேற்று ஒன்றை சொல்வார்கள். இன்று அவர்களே அந்த கருத்துக்கு நேரிடையான எதிர்ப்பில் ஒரு கவிதையை வடிப்பார்கள். நாமும் ரசித்து கொண்டிருப்போம். எனவே கற்பனைகளை தவிர்த்துக் கொள்ள இஸ்லாம் சொல்கிறது. அதே சமயம் உண்மைகளை கவிதையாக வடிப்பதற்கு தடை இல்லை. உண்மைகளை கவிதைகளை வடிக்கும் சில கவிஞர்களுக்கு முகமது நபி பரிசுகளையும் வழங்கியிருக்கிறார்.

குர்ஆனே கவிதை நடையில்தானே இருக்கும்.

'அல்காரியா! மல்காரியா! வமாஅத்ராக மல்காரியா!'-குர்ஆன் 101:1,2

'இதா ஜீல்ஜிலதில் அர்ள் ஜில்ஜாலஹா!
வ அஹ்ரஜதில் அர்ள் அத்ஹாலஹா!' -குர்ஆன் 99:1,2

கவிதையின் ஆழத்தை அரபி படித்தவர்களால்தான் உணர முடியும். அன்றைய அரபுகள் குர்ஆன் ஓதப்பட்டால் அதன் இனிமையில் மயங்கி விடாமல் இருப்பதற்காக காதுகளில் பஞ்சை வைத்துக் கொள்ள தனது நண்பர்களுக்கு அறிவுறுத்துவார்களாம்.

எனவே ஒளரங்கஜேப்பின் மகள் கற்பனைகளை கவிதைகளாக வடித்திருக்கலாம். அதை அவர் தடுத்தும் இருக்கலாம்.

எத்தனையோ மக்கள் சாப்பாட்டுக்கு தவித்துக் கொண்டிருக்கும்போது நமது கலைஞர் கூத்தாடிகளுக்கும், சினிமா கவிஞர்களுக்கும் பதக்கங்கள் வழங்குதல், இலவசமாக வீடு கொடுத்தல் போன்ற கூத்துகளை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

தருமி said...

//கவிதையின் ஆழத்தை அரபி படித்தவர்களால்தான் உணர முடியும். //

ஆமாமா ... இதுலகூட அதப்பத்தி சொல்லியிருக்கு..

தருமி said...

//குர்ஆன் ஓதப்பட்டால் அதன் இனிமையில் மயங்கி விடாமல் //

நானும் பாங்கு ஓதும்போது அதன் ‘இனிமையைக்’ கேட்டிருக்கேனே ...

தருமி said...

'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள்,மற்றும் இறைத்தூது சென்றடையாத நல்லோர்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.'
-குர்ஆன் 2:62

அப்பாடா ..! எந்த சாமியையும் - காளி, ஏசு,முருகன், ஐயப்பா etc,..etc... - கும்பிடலாம்! அல்லா, கடைசி நபி, இதெல்லாம் கூட வேணாம். மீசை இல்லாமல் தாடி வைக்கவேண்டாம்.. தாடிக்குக் கலர் அடிக்க வேண்டாம் .. சுன்னத் பண்ண வேண்டாம்... அந்த 5 கடமைகள் பற்றிக் கவலையில்லை .. ஆண்கள் தங்க மோதிரம் போடலாம் ..நின்று கொண்டே சிறுநீர் கழிக்கலாம் ... பாட்டு பாடலாம் .. கவிதை எழுதலாம் .. படம் வரையலாம் .. ஆடலாம் ..

ஒரே விஷயம் கடவுளை நம்பி நல்லறம் செய்யணும். ஈசியா இருக்கே... நாங்க சொல்ற மனிதநேயத்தில் இது எல்லாமே அடங்கிருது.

அப்போ நாம் எல்லோரும் இறுதி நாளில் ’அங்கே மொத்தமாய் சேர்த்துவைத்து சிரிப்போம்’.

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//However, we must realize that Zakat is an act of worship (ebadah) like Salaat. The element of intention (niyyah) is necessary, and we should not overly rely on state agencies to determine for us the requirements of our religious duty. The so called the "consumption basket" (that is poverty level as determined the social security administration which are updated every fiscal year) may not be the same as what Islam considers minimum Nisaab.//

இப்படி வசூலிக்கப்படும் அனைத்து தொகையும் எங்கு செல்கிறது? அரசு கஜானாவுக்கு செல்கிறது. இது யாருக்கு செலவிடப்படுகிறது?

'யாசிப்பொருக்கும், ஏழைகளுக்கும்,அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும்,கடன் பட்டோருக்கும், இறைவனின் பாதையிலும், நாடோடிகளுக்கும், இந்த ஜகாத் உரியனவாகும்'-குர்ஆன் 9:60

இங்கு கிட்டத்தட்ட ஒரு அரசாங்கம் தனது மக்களுக்கு எதை எல்லாம் செய்யுமோ அத்தனை செலவினங்களும் இதில் அடங்குகிறது. இந்த பணத்தில் இந்துக்களும் பயனடைந்திருக்கிறார்கள். ஏனெனில் இங்கு யாசிப்போர், நாடோடிகள்,கடன்பட்டோர் என்று வருவது அனைத்து சாராரையும் குறிக்கும்.

'முஹம்மதே! முஸ்லிம்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக!'அதன் மூலம் அவர்களைத் தூய்மைபடுத்தி பரிசுத்தமாக்குவீராக!' -குர்ஆன் 9:103

கட்டாயமாக முஸ்லிம்களிடம் எடுக்கச் சொல்கிறது குர்ஆன். இந்த நிலையில் அந்த அரசனுக்கு கீழ் உள்ள மாற்று மதத்தவர் எந்த வரியும் செலுத்தாமல் இருப்பது உங்களுக்கு நியாயமாகப்படுகிறதா?

ஜகாத்தோடு ஒப்பிடும்போது ஜிஸியா வரி மிக சொற்பமானது என்று விளக்கியும் இருக்கிறேன். ஜகாத்தோ,ஜிஸியாவோ ஒரு அரசு செய்ய வேண்டியது. தனிப்பட்ட மனிதர்கள் இங்கு பேசப்படவில்லை என்பதையும் கவனிக்கவும்.

குடுகுடுப்பை said...

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள்,மற்றும் இறைத்தூது சென்றடையாத நல்லோர்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.'
-குர்ஆன் 2:62

இந்த வசனத்தை பல முறை சிந்தித்து பாருங்கள் நண்பரே! யூதராக இருந்தாலும், கிறித்தவராக இருந்தாலும், இறைத்தூதே கிடைக்காதவராக இருந்தாலும் இறைவனையும் மறுமையையும் நம்பி தூய உள்ளத்தோடு ஒருவர் நல்லறங்கள் செய்தால் அதற்குரிய கூலி அவருக்கு உண்டு என்று இறைவன் பதிலளிப்பதை பார்க்கவில்லையா?//
உருவ வழிபாடு செய்யும் உங்கள் வீட்டு வேலைக்காரப்பெண்ணுக்கு நல்லவளா கெட்டவளா? அவளுக்கு ஏன் நரகம்.?
தனக்கு வணக்கம் வைக்காததால் நீதிபதி ஒரு நிரபராதிக்கு தண்டனை கொடுத்தால்,தவறு நீதிபதியின் மேலா வணக்கம் வைக்காத நிரபராதி மேலா? இதற்கெல்லாம் விடை சாதாரண மனிதனாக மதம் தாண்டி சிந்திந்தால்தான் கிடைக்கும். இஸ்லாமியன் என்ற நிலையில் உங்களால் முடியாது. அதற்கு கும்மி போல சிந்திக்கவேண்டும்.

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//vijay_dl said...
கோவில் என்பது பொதுவானதாக இருக்கவேண்டும் அது என்ன தன் சாதிக்கு மட்டும் கட்டுவது. எல்லாருக்கும் பொதுவாக கட்டாதது எது? சாதி வெறி?அங்கேதான் உங்கள் மனநிலை சரியில்லை. தாழ்த்தப்பட்டவனின் வரி கேளுங்கள் கண்டிப்பாக கட்டுவான், வேண்டுமென்றே ஒதுக்கிவிட்டு நியாயம் வேறா?//

இது டோண்டு பதிவில் வந்த பின்னூட்டம். பிறபடுத்தப்பட்ட சாதியினர் தனியாக ஒரு கோவிலைக் கட்டிக் கொண்டு அந்த கோவிலுக்குள் தாழ்த்தப்படடவர்களை அனுமதிப்பதில்லை. கேட்டால் அவர்கள் கோவிலுக்கு வரி கட்டுவதில்லை என்ற வாதத்தை வைக்கிறார்கள். இது எவ்வளவு அநியாயாயம் என்பது நமக்குத் தெரியும்.

இதே அளவு கோலை ஜிஸியா வரியிலும் வைத்துப் பாருங்கள். முஸ்லிம்களிடம் மட்டும் ஜகாத் வசூலித்து இந்துக்களிடம் எந்த வரியும் வசூலிக்காமல் ஒரு இஸ்லாமிய அரசாங்கம் விட்டு விட்டால் இன்று எப்படி அரிஜனங்கள் பாதிக்கப்பட்டார்களோ அதே பாதிப்பைத்தான் இந்துக்களும் அடைவார்கள். அரிஜனங்கள் பாதிப்படைந்ததை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். ஒளரங்கஜேப் அன்று செய்ததை குறை காணும் நீங்கள் அரிஜனங்கள் கோவிலுக்குள் அனுமதிக்காததை நியாயப்படுத்தப் போகிறீர்களா?

ஹுஸைனம்மா said...

இன்றுதான் வாசிக்கக்கிடைத்தது இப்பதிவு. மாஷா அல்லாஹ். வெகுநாள் மனதில் கிடந்தரித்த விஷயம் - ஔரங்கஸீப்பின் மீதான பழி. இன்னும் நிறைய அறியும், புரியும் வாய்ப்பும் வாய்த்தது. நன்றி.

suvanappiriyan said...

ஹீசைனம்மா!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள்.

ஒளரங்கஜேப்பின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க நம் செல்வந்தர்கள் முன் வர வேண்டும்.