Followers

Saturday, February 26, 2011

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா!





சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜுமா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்

மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர். இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல்

தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்). அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள். இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."

இறப்பு

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.

சில தகவல்கள்

  • சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.
  • சேரமான் பெருமாள் ஜுமா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜுமா மசூதி மதினாவில் உள்ளது)
  • சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
  • சேரமான் பெருமாள் மற்றும் மாலிக் பின் தீனார் (ரலி) ஆகிய இருவரது சமாதியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது.
  • a b William Logan, Malabar Manual, Asian Educational Services, 1996 ISBN 8120604466, 9788120604469
  • saheehain al mustadrak reported by Al Imam Al Hafiz Abi Abdillah AL HAKIM -vol 4 chap 33 kitabul ath’ama page 241
  • The Land of the Permauls. Cochin, Its Past and Its Present 1863. Chapter 2. Page 44, The Last "Permaul." Dr. Francis Day.

-நன்றி விக்கிபீடியா

THRISSUR: President A. P. J. Abdul Kalam will visit the Cheraman Juma Masjid at Kodungallur, near here, considered to be the first mosque in the subcontinent, on July 29.

According to the president of the Mosque Committee V. A. Ibrahim, the President has responded to an invitation sent by the committee two months ago.

``This is the first time that an Indian President is visiting the mosque. It is a historic occasion,'' Mr. Ibrahim says.

The President is expected to arrive at the mosque at 5.45 p.m. and spend 25 minutes there.

He will meet mosque committee officials, address the gathering and leave at 6.10 p.m.

The mosque is believed to have been established in 629 AD by Malik Bin Dinar, a contemporary of Cheraman Perumal.

Belief goes that Perumal had gone to Mecca, met Prophet Mohammed and embraced Islam. Perumal fell ill as he returned from Mecca.

Malik Bin Dinar and a few others reached Kodungallur and showed the rulers letters written by Perumal about his new religious experiences. Dinar and his associates were allowed to construct a mosque.

When Dinar, who was the chief priest (Ghazi) of the mosque, left for Arabia, his nephew Habib Bin Malik took over.

The mosque is believed to have been renovated in the 11th and 18th centuries AD. In 1974, an extension was built.

``The mosque has been visited by a galaxy of celebrities, including theologians from different parts of the world,'' says Mr. Ibrahim.

`Vidyarambham' (initiation into world of letters) ceremonies have been held in the mosque, Hindu style, in the past four years.

-நன்றி தி ஹிந்து நாளிதழ்

கல்கியில் கண்ணதாசன் 'சேரமான் காதலி' என்ற வரலாற்றுத் தொடரை எழுதினார். படிக்கும் காலங்களில் இத் தொடரை தொடர்ந்து படித்து வந்தேன். உலகின் இரண்டாவது ஜூம்ஆ பள்ளி நம் நாட்டில் உள்ளதுதான் என்ற செய்தி எனக்கு புதிதாக இருந்தது. சேரமான் பெருமாளைப் பற்றி வேறெதுவும் சரித்திரக் குறிப்புகள் இருந்தால் நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.


அரசாட்சி, சுகபோக வாழ்க்கை அனைத்தையும் உதறி தள்ளி விட்டு முகமது நபியைக் காண புறப்பட்ட சேரமான் பெருமாள் போற்றப்பட வேண்டியவர். படிக்கும் காலங்களில் ஒவ்வொரு வருடமும் வரலாற்று பாடத்தை நான் படித்திருந்தாலும் ஒரு வருடம் கூட சேரமான் பெருமாளைப் பற்றிய குறிப்புகளை என்னால் பார்க்க முடியவில்லை. ஒருக்கால் நம் சரித்திர ஆசிரியர்களுக்கு சேரமானின் வரலாறு தெரியவில்லையோ என்னமோ! :-(

'அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. அவர்கள் சான்றைக் கண்டால் 'இது தொடர்ந்து நடக்கும் சூனியம்' எனக் கூறி புறக்கணிக்கின்றனர்.'

-குர்ஆன் 53:1,2

21 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மிக அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன். மறைக்கப்பட்ட இந்த வரலாறுகள் பலருக்கு சென்றடைய வேண்டும்.

அந்த ஊறுகாய் சம்பந்தமான ஹதீஸ் முன்பே நான் கேள்விப்பட்டிருந்தாலும், அந்த இந்தியர் தாஜுதீன்(ரலி) அவர்கள்தான் என்று இந்த இடுகை மூலம் தான் அறிந்துகொண்டேன். ஜசாக்கல்லாஹ் க்ஹைர் சகோ.

அப்புறம்...

ஹிஜ்ரி முதலாம் ஆண்டில், முதலில் கூஃபா மஸ்ஜித், பின்... மஸ்ஜிதே நபவி, அப்புறம் மஸ்ஜிதே கிப்லதைன் அதன் பின்னர், எட்டு ஆண்டுகளில் இஸ்லாமிய ஆட்சி பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பரவ, பல பள்ளிகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். பல ஜும்மாக்கள் நடந்திருக்க வேண்டும். அதற்குப்பின்னர் நபி(ஸல்) அவர்களுடன் கடைசி ஹஜ்ஜில் பங்கேற்று உள்ளார் இந்த இந்திய சஹாபி தாஜுதீன்(ரலி)அவர்கள். அதன்பின்னர் அவருடன் புறப்பட்டு வந்த மாலிக் பின் தீதார் (ரலி) இந்தியா வந்து கட்டியது இந்த கேரள பள்ளி,//இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்//--என்பது சரியான தகவலா என்று சரி பார்த்துக்கொண்டீர்களா சகோ?

முதல் இந்திய ஜும்மா பள்ளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

suvanappiriyan said...

வ அலைக்கும் சலாம்!

சகோ.ஆஷிக்!

//இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்//--என்பது சரியான தகவலா என்று சரி பார்த்துக்கொண்டீர்களா சகோ?//

இந்த செய்தி புதிதாக இருக்கிறது என்று இதனால்தான் என் பதிவிலேயே குறிப்பிட்டேன். நீங்கள் கொண்டிருக்கும் கருத்துதான் என் கருத்தும். விக்கியில் வரும் அனைத்தும் அத்தனை நம்பகமானதாக இருக்க முடியாது. சில ஆதாரமற்ற செய்திகளும் வந்து விடுவது உண்டு. பல ஹதீஸ் நூல்களை பார்த்த வகையில் இப்படி ஒரு செய்தி இல்லை. எனவே முதல் இந்திய ஜூம்ஆ பள்ளி என்றுதான் வாசகம் வர வேண்டும். விளக்கியமைக்கு நன்றி.

சேரமான் சம்பந்தமாக ஆதாரமான வேறு செய்திகள் ஏதும் கிடைத்தால் நண்பர்கள் தெரிவிக்கலாமே!

Anonymous said...

assalamu alaikkum varahamathullahi vabarakathahu.dear brother how are u.this article is very good.alhamdulillah.i am visited in google search there is mentioned this masjid was made AD 628.our prophet mohamed nabi went madina AD622.so i thought this is not should be a world second juma masjid.thank you for this post i got lot of matters about this article alhamdulillah by your brother mohamed iqbal.

suvanappiriyan said...

உங்கள் மீதும் நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

சகோதரர் இக்பால்!

//i am visited in google search there is mentioned this masjid was made AD 628.our prophet mohamed nabi went madina AD622.so i thought this is not should be a world second juma masjid.//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி! தொடர்ந்து கருத்துக்களை அளித்து வாருங்கள்.

suvanappiriyan said...

ராபின்!

மற்றவர்களை அழைக்கும் போது வேறு பொருளையும் ஏசுவை அழைக்கும் போது மட்டும் சொந்த மகனாகவும் எப்படி உங்களால் எடுத்துக் கொள்ள முடிகிறது?

//ஏசுநாதரின் பிறப்பு அதிசயமானது. இதை குரானும் ஒப்புக்கொள்கிறது. அவர் பரிசுத்த ஆவியானவராலே பிறந்தார். //

தந்தை யில்லாமல் பிறந்த ஏசு மகிமைவாய்ந்தவர் என்றால் தாயும் தந்தையும் இல்லாமல் பிறந்த ஆதாமை ஏசுவைவிட மேன்மைபடுத்த வேண்டுமே! ஏன் நீங்கள் அவ்வாறு செய்வதில்லை.

//பிதா என்றால் தந்தை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். மாத, பிதா, குரு, தெய்வம் - கேள்விப்பட்டதில்லையா?//

பழமொழிகளை பார்க்காமல் தமிழ் டிக்னரியை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு விளங்கியிருக்கும். இணையத்தில் கூட தேடிப்பார்க்கலாம். தகப்பன், தந்தை, பிதா என்ற மூன்று சொல்லுக்கும் ஆங்கிலத்தில் ஃபாதர் என்ற சொல்லே இணையத்தில் கிடைக்கிறது. இதற்கு உங்களின் பதில் என்ன?

www.tamildict.com/tamilsearch.php

என்ற இணையதளத்தில் சென்று பிதா என்ற சொல்லுக்கு அர்த்தத்தைக் கேளுங்கள். விபரமாக சொல்வார்கள்.

//இதில் எந்த சிக்கலும் இல்லை, குழப்பமும் இல்லை. //

நீங்களாக ஒரு சமாதானத்தை சொல்லிக் கொண்டால் அதில் நான் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் நான் கேட்ட கேள்விகள் மட்டும் அப்படியே நிற்கும்.

Anisha Yunus said...

மாஷா அல்லாஹ், மிக மிக புதிய தகவல் எனக்கு. பகிர்ந்தமைக்கு நன்றி பாய். :)

suvanappiriyan said...

சகோ. அன்னு!

//மாஷா அல்லாஹ், மிக மிக புதிய தகவல் எனக்கு. பகிர்ந்தமைக்கு நன்றி பாய். :)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அபூ முஹை said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் சுவனப்பிரியன்,
தேடுதல் நேரத்தில் இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தது.

கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நபி (ஸல்) அவர்களை எப்படிச் சந்தித்திருக்க முடியும்? என்கிற மிகச் சாதாரண ஆய்வுமின்றி இப்பதிவின் தகவல்கள் உள்ளன.

நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் சந்திரன் பிளக்கப்பட்ட நிகழ்வு நடந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பு. இதை எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள் கண்டார் என்று சொல்வது அதிசயத்தையும் மிஞ்சிவிட்டதே கவனிக்கவில்லையா?

கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மனின் கடித உத்தரவினால் கி.பி 612ல் கொடுங்கலூரில் முதல் பள்ளிக் கட்டப்பட்டது என்ற செய்தி திகைப்பின் விளிம்பிற்குக் கொண்டு சென்று விடுகிறதே இவ்வளவு குழப்பமும் குளறுபடிகளும் ஏன் உங்களிடம்?

எழுதத் தோன்றியது...

அன்புடன்,
அபூ முஹை

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ அபூ முஹை!

சேரமான் பெருமாள் என்ற பெயரில் பல அரசர்கள் கேரளா, தமிழ் நாட்டில் ஆட்சி செய்துள்ளனர். இதில் நபிகளை சந்தித்தது எந்த சேரமான் எனபது வரலாற்றாசிரியர்களிடையே இன்றும் குழப்பம்தான் உள்ளது. விக்கி செய்தியை ஆதாரமாக வைத்துதான் அந்த பதிவையே எழுதினேன். இந்த செய்திகள் சம்பந்தமாக எனக்கும் பல குழப்பங்கள் உள்ளது என்பதையும் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன். பல தகவல்களை விளக்கியமைக்கு நன்றி.

அன்புடன்
சுவனப்பிரியன்.

Amjat said...

br aslamu alaikkum


i want to speak some thing wit u pls mail me personally

Amjat said...

br aslamu alaikkum


i want to speak some thing wit u pls mail me personally

Muhamed Riyaz said...
This comment has been removed by the author.
Muhamed Riyaz said...
This comment has been removed by the author.
கௌதம் said...

வாழ்ந்தது கி.பி எட்டாம் நூற்றாண்டு .. சந்தித்தது ஆறாம் நூற்றாண்டு .. நல்ல கட்டுக்கதை..

Muhamed Riyaz said...

Modi gifted a replica of Cheraman Juma Masjid to the Saudi King; here’s why this mosque is so important for both countries
http://indianexpress.com/article/explained/narendra-modi-cheraman-juma-masjid-replica-saudi-king-gift/

Muhamed Riyaz said...


Muhamed Riyaz said...

Modi gifted a replica of Cheraman Juma Masjid to the Saudi King; here’s why this mosque is so important for both countries
http://indianexpress.com/article/explained/narendra-modi-cheraman-juma-masjid-replica-saudi-king-gift/

Muhamed Riyaz said...

Modi gifted a replica of Cheraman Juma Masjid to the Saudi King; here’s why this mosque is so important for both countrieshttp://indianexpress.com/article/explained/narendra-modi-cheraman-juma-masjid-replica-saudi-king-gift/

Muhamed Riyaz said...

https://www.asian-voice.com/Volumes/2017/13-May-2017/Early-Arrival-of-Islam-in-Southern-India

The PM tweeted on 3 April 2016 says : “In Thrissur district, Cheraman Juma Masjid is believed to be the first mosque built by Arab traders around 629 AD

Vzshukoor said...

நாவலர் A.M.யூசுப் அவர்கள் எழுதிய சிந்து நதிக் கரையினிலே என்ற வரலாற்றுப் புத்தகத்தில் மேற் கூறும் சேரமான் பெருமாள் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது

Unknown said...

இந்த வரலாற்றில் மன்னர் வாழ்ந்த காலம் 8ஆம் நூற்றாண்டில் என்றால் 6ஆம் நூற்றாண்டில் பள்ளி வாசல் கட்டியதாக உள்ளது முரண்பாடாக உள்ளதே?